என் மலர்
ஆன்மிகம்

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு கேதாரி-கவுரி விரதம்
ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கேதாரீஸ்வரரை வழிபடும் கேதாரி-கவுரி விரதம் நடைபெறுவது வழக்கம்.
ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கேதாரீஸ்வரரை வழிபடும் கேதாரி-கவுரி விரதம் நடைபெறுவது வழக்கம். அதாவது பார்வதி தேவி ஐப்பசி மாத அமாவாசை நாளில் பூமிக்கு எழுந்தருளி சாமியை வழிபட்டதை நினைவுக் கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்த ஐப்பசி அமாவாசை அன்று பெண்கள் சிவனாகிய கேதாரீஸ்வரரை அர்ச்சனை செய்து வழிபடும் நாள் இந்த கேதாரி-கவுரி விரதநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி காரைக்காலை சேர்ந்த தலத்தெருவில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசாமி கோவிலில் கேதாரி-கவுரி விரதத்தை முன்னிட்டு சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து குடும்பம் தழைக்கவும், ஊர் சுபிட்சம் பெற வேண்டியும் தீபாவளிக்கு மறுநாளான நேற்று வந்த அமாவாசை தினத்தில் பெண்கள் விரதமிருந்து கேதாரீஸ்வரரை மலர்களால் பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் காரைக்கால் அம்மையார் எழுந்தருளியுள்ள சோமநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் பெண்கள் கேதாரி-கவுரி விரதம் இருந்து கேதாரீஸ்வரரை வழிபட்டனர்.
அதன்படி காரைக்காலை சேர்ந்த தலத்தெருவில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசாமி கோவிலில் கேதாரி-கவுரி விரதத்தை முன்னிட்டு சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து குடும்பம் தழைக்கவும், ஊர் சுபிட்சம் பெற வேண்டியும் தீபாவளிக்கு மறுநாளான நேற்று வந்த அமாவாசை தினத்தில் பெண்கள் விரதமிருந்து கேதாரீஸ்வரரை மலர்களால் பூஜை செய்து வழிபட்டனர். இதேபோல் காரைக்கால் அம்மையார் எழுந்தருளியுள்ள சோமநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களிலும் பெண்கள் கேதாரி-கவுரி விரதம் இருந்து கேதாரீஸ்வரரை வழிபட்டனர்.
Next Story






