என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    2016-ம் ஆண்டிற்கான சக்தி விரத வழிபாடுகள்
    X

    2016-ம் ஆண்டிற்கான சக்தி விரத வழிபாடுகள்

    சக்தி விரத வழிபாடுகள் எத்தனை. அவை என்னவென்று கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
    வருடத்துக்கு 4 நவராத்திரிகள் உண்டு.

    ஆஷாட நவராத்திரி :

    ஆனி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் ஆஷாட நவராத்திரி எனப்படும்.

    சாரதா நவராத்திரி :

    புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் சாரதா நவராத்திரி எனப்படும். வழக்கமாக சாதி சமய வேறுபாடு இல்லாமல் அனைத்து மதத்தினரும் கொண்டாடும் நவராத்திரியாக சுப ராத்திரியாகத் திகழ்கிறது. கலைமகள் வணக்கம் பெரிதும் பேசப்படும் ராத்தி இது.

    மகா ராத்திரி :

    தை மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் மகா நவராத்திரியாகும்.

    வசந்த ராத்திரி :

    இது பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது ராத்திரிகள் வசந்த நவராத்திரியாகும். நான்கு நவராத்திரியிலும் அம்மனை (சக்தியை) வழிபடுவது சிறப்பைத்தரும். மற்றவற்றைப் பின்பற்றாவிட்டாலும் கூட வசந்த நவராத்திரியையும், சாரதா நவராத்திரியையும் பின்பற்றி அம்பாள் அருளைப்பெறுக.

    வராத்திரி விரதம் :

    நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள். அதை அடுத்த விஜயதசமியைச் சேர்த்து ‘தசரா’ என்று கூறப்படுகிறது. இந்த நாட்களில், மூன்று தேவிகளான பார்வதி (துர்க்கை), லட்சுமி, சரசுவதியைப் பூஜை செய்வார்கள். முதல் மூன்று நாட்கள் பார்வதி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்கும் அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் ஆகும். இவற்றை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்பார்கள்.

    புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் தொடங்கி, நவமி வரையில் ஒன்பது நாட்கள் நவராத்திரி விரதம்; அடுத்து தசமியில் விஜயதசமி, அதையே ஆயுத பூஜை என்று கூறுவர்.

    அமாவாசையன்றே பூஜைக்கு வேண்டிய பொருள்களைச் சேகரித்துக் கொண்டு, அன்று உபவாசம் இருந்து, மறுநாள் பிரதமையில் பூஜை தொடங்க வேண்டும். அவரவர்களின் வசதிக்குத் தகுந்தவாறு, மேடை அலங்காரங்கள், பழவகைகள், சித்திரான்னங்கள் முதலியவற்றைச் செய்வார்கள்,

    ஒன்பது நாட்களும் பூஜை நடத்த இயலாதவர்கள், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாட்களிலாவது பூஜையைச் செய்வார்களேயானால் ஒன்பது நாள் விரதப் பலனையும் அடைவார்கள். அதற்கும் இயலாதவர்கள் அஷ்டமி ஒரு நாளாவது அவசியம் செய்ய வேண்டும்.
    Next Story
    ×