என் மலர்
ஆன்மிகம்

பெண்கள் கடைபிடிக்கும் ஆடிமாத பராசக்தி விரதம்
ஆகஸ்டு மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளும் பராசக்தி விரதம் என்று பெயர். இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை பற்றி பார்க்கலாம்.
உலகநாயகியான அம்பிகையை ஆடி மாதம் வழிபடுவது சிறப்பு. ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். ஆகஸ்டு மாதத்தின் கடைசி செவ்வாயன்று மேற்கொள்வது பராசக்தி விரதம்.
பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தால் எண்ணியதுநிறைவேறும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். இந்த விரதத்தை அதிகாலை ஐந்து மணிக்கே தொடங்க வேண்டும். முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பார்வதியின் அம்சமான மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்களை சிவப்பு நிற மலர்களால் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும்.
பால், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர், இனிப்பு படைக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், மதியம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது அவசியம். இரவில் கோவிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவது அவசியம்.
பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்தால் எண்ணியதுநிறைவேறும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். இந்த விரதத்தை அதிகாலை ஐந்து மணிக்கே தொடங்க வேண்டும். முதலில் விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பார்வதியின் அம்சமான மீனாட்சி, காமாட்சி அம்மன் படங்களை சிவப்பு நிற மலர்களால் அலங்கரித்து விளக்கேற்ற வேண்டும்.
பால், பழம், வெற்றிலை பாக்கு, இளநீர், இனிப்பு படைக்க வேண்டும். விரதம் அனுஷ்டிப்பவர்கள், மதியம் ஒருவருக்காவது அன்னதானம் செய்வது அவசியம். இரவில் கோவிலுக்குச் சென்று அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வழிபடுவது அவசியம்.
Next Story






