என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வ செழிப்பான வாழ்க்கை தரும் ஸ்ரீசத்தியநாராயணா விரத பூஜை
    X

    செல்வ செழிப்பான வாழ்க்கை தரும் ஸ்ரீசத்தியநாராயணா விரத பூஜை

    ஸ்ரீசத்தியநாராயண பூஜையை பௌவுர்ணமியன்று செய்தால், தடைப்படும் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடைபெறும்.
    பூஜை முறை பௌர்ணமி அன்று மாலை, குளித்துவிட்டு பூஜை அறையை மெழுகி, தாமரை மலர் கோலமிட வேண்டும். மாலை 4.30- 6.00மணிக்குள் பூஜையை தொடங்கி முடித்துவிடவேண்டும். தாமரைக் கோலத்தின் மீது, ஒரு பலகையிட்டு, கும்பம் வைக்க வேண்டும். அதில் நூல் சுற்றி, அதற்கு வஸ்திரம் கட்டி, நிறைகுடத்தில் இருந்து நீர் நிரப்பி, அதன் மேல் மலர்கள் தூவ வேண்டும்.

    ஸ்ரீசத்தியநாராயணர் படம் ஒன்றை கும்பத்தின் அருகில் வைக்க வேண்டும். படத்தின் முன் கோதுமை மாவுடன், வாழைப்பழம், நெய், பால், தேன் கலந்து செய்த அப்பத்தை நைவேத்யமாக படைக்க வேண்டும். மனதில் இஷ்ட தெய்வம் குலதெய்வம், விநாயகர், துர்க்கை, வருணபகவான், நவக்கிரகங்களை நினைத்து வணங்க வேண்டும்.

    அத்துடன் ஸ்ரீசத்தியநாராயணனையும் வணங்கவேண்டும். கும்பத்திற்கு சாம்பிராணி, கற்பூரம் காட்டி விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீமன் நாராயணனை குறித்து 108 போற்றி பாடல்களையும் பாடலாம். பூஜை முடிந்தவுடன் அன்னதானம் செய்ய வேண்டும்.

    Next Story
    ×