search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் சோமவார விரதம்
    X

    திருமண தடை நீக்கும் சோமவார விரதம்

    சிவனுக்கு உகந்த சோமவார விரதத்தை முறையாக கடைபிடித்தால் திருமண வாழ்வில் ஏற்படும் அனைத்து சோதனைகளும் தீரும்.
    நமது உடலுறுப்புக்கள் பலவித செயல்களைச் செய்கின்றன. அவற்றில் நல்லதும், கெட்டதும் அடக்கம். இந்த செய்கைகள் மனதின் தூண்டுதலால் வெளிப்படுகிறது. நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன.

    நாள் : கார்த்திகை மாத திங்கள் கிழமைகள், வாரந்தோறும் வரும் திங்கள் கிழமைகள்.

    தெய்வம் : சிவபெருமான்

    விரதமுறை : இரவு மட்டும் சாப்பிட வேண்டும். முடியாதவர்கள் மட்டும் காலையிலும் சாப்பிடலாம்.

    பலன் : திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வாழ்க்கை துணை, திருமணமானவர்களுக்கு தகுந்த வாழ்க்கை

    சிறப்பு தகவல் :  கணவன், மனைவி இருவரும் இணைந்து சிவாலயம் சென்று வருவது மிகவும் நல்லது.
    Next Story
    ×