search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கீழக்கரையில் மிலாதுநபி விழா
    X
    கீழக்கரையில் மிலாதுநபி விழா

    கீழக்கரையில் மிலாதுநபி விழா

    கீழக்கரை அதாயி அரபிக் கல்லூரி மற்றும் எம்.கே.எம். செய்யது மீரா பீவி அறக்கட்டளை சார்பாக மிலாது நபி விழா நடைபெற்றது.
    கீழக்கரை அதாயி அரபிக் கல்லூரி மற்றும் எம்.கே.எம். செய்யது மீரா பீவி அறக்கட்டளை சார்பாக மிலாது நபி விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, கீழக்கரை சப்- இன்ஸ்பெக்டர் அங்குச் சாமி, அப்துல் கபார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முகம்மது ஷிஹாப் ஆகில் அதாயி செய்திருந்தார். அத் அரசர் அதாயி மதரசாவின் மாணவர்கள் கலந்துகொண்டு நபிகளின் புகழ்மாலை மவுலீது ஓதி உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

    அதேபோல் பி.எஸ்.எம். நிறுவனம் மற்றும் ஆயிஷா குர்ஆன் ஹிப்லு மதரசா இணைந்து நடத்திய மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா பி.எஸ்.எம். பெண்கள் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் அரசு காஜி சலாஹுத்தீன் ஆலிம் தலைமை தாங்கினார். அப்துல் சலாம் ஆலிம் பாகவி, முகமது மன்சூர் அலி ஆலிம் ஆகியோர் துவா ஓதி தொடங்கினர்.பி.எஸ்.எம். மேலாளர் அஹமது பிலால் வரவேற்றார். உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கத்தின் மேலாளர் அப்துல் ரசாக் உமர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பவுசுல் அமீன் நன்றி கூறினார்.
    Next Story
    ×