search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பள்ளிவாசல்
    X
    பள்ளிவாசல்

    விரிவாக்கம் செய்யப்பட்ட165 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் திறப்பு

    காரைக்கால் புதுத்துறை கிராமத்தில், 165 ஆண்டுகள் பழமையான முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. தற்போது அந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது.
    காரைக்கால் புதுத்துறை கிராமத்தில், 165 ஆண்டுகள் பழமையான முஹைய்யதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. தற்போது அந்த பள்ளிவாசல் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது.

    பள்ளிவாசல் வக்பு நிர்வாக சபை தலைவர் முஹம்மது யாசின் தலைமை தாங்கினார். புதுத்துறை பள்ளி வாசல் இமாம் முஹம்மது அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தார். மவுலவி முகம்மது ரியாஜ் மிஸ்பாஹி சிறப்புரை ஆற்றினார். இதில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×