என் மலர்
ஆன்மிகம்

யூனுஸ் (அலை) அவர்களுக்கு உருவான நெருக்கடி
யூனுஸ் (அலை) அவர்களுக்கு உருவான நெருக்கடியை பற்றி பார்க்கலாம்.
நபி யூனுஸ் (அலை) அவர்களை, இராக்கிலுள்ள நைனுவா என்ற ஊருக்கு, நபியாக இறைவன் அனுப்பி வைத்தான். அந்நகரத்தில் மக்கள் பெரும் செல்வந்தர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஓரிறைக் கொள்கையைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.
சிலை வழிபாட்டில் சீரழிந்த அச்சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக யூனுஸ் (அலை) மிகவும் பாடுபட்டார்கள். மிகச் சிலரைத் தவிர மற்ற எல்லோரும் தங்கள் கற்பனை தெய்வத்தைக் கைவிடவில்லை. "உங்கள் கையால் செய்யப்பட்ட உயிரற்றவையை வைத்து வணங்குகிறீர்கள். சக்தியில்லாததை விடுத்து ஏக இறைவனை வணங்குங்கள்" என்று போதித்தார்கள்.
ஆனால் மக்கள் அவர்களுடைய போதனைகளுக்குச் செவிமடுக்கவில்லை. இறைத்தூதரை பொய்யர் என்று தூற்றினர்.
யூனுஸ் (அலை), நைனுவா மக்களிடம் "நீங்கள் நல்வழிக்குத் திரும்பவில்லையென்றால் அல்லாஹ்வின் கோபப் பார்வை உங்கள் மீது இறங்கிவிடும்" என்று எச்சரித்தார்கள்.
அதற்கு அந்த நைனுவா மக்கள், இறைவனுக்குப் பயப்படாமல் இறைத்தூதரைக் கிண்டல் செய்தார்கள். இதனால் மனம் வெறுத்து இறைவனின் அனுமதியில்லாமல் யூனுஸ் (அலை) அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.
எதிர்பார்த்த நாளில் வேதனை இறங்கவிருக்கிறது என்று அறிந்து கொண்ட மக்கள் சிரம் தலையில் படும்படி தங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு உள்ளத்தூய்மையுடன் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு, அவர்கள் மீது இறைவன் கருணை புரியும்படி அழுது மன்றாடினார்கள். இறைவனும் அவர்களை மன்னித்தான்.
மக்கள் மனம் திருந்திவிட்டார்கள் என்பதை அறியாமல் யூனுஸ் (அலை) அங்கிருந்து கோபமாக வெளியேறிய போது, இறைவன் அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்க மாட்டான் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் அங்கு காட்சி மாறியது. யூனுஸ் (அலை) அவர்களை நெருக்கடி துரத்தியது.
திருக்குர்ஆன் 10:98, 21:87
- ஜெஸிலா பானு
சிலை வழிபாட்டில் சீரழிந்த அச்சமூக மக்களைச் சீர்திருத்துவதற்காக யூனுஸ் (அலை) மிகவும் பாடுபட்டார்கள். மிகச் சிலரைத் தவிர மற்ற எல்லோரும் தங்கள் கற்பனை தெய்வத்தைக் கைவிடவில்லை. "உங்கள் கையால் செய்யப்பட்ட உயிரற்றவையை வைத்து வணங்குகிறீர்கள். சக்தியில்லாததை விடுத்து ஏக இறைவனை வணங்குங்கள்" என்று போதித்தார்கள்.
ஆனால் மக்கள் அவர்களுடைய போதனைகளுக்குச் செவிமடுக்கவில்லை. இறைத்தூதரை பொய்யர் என்று தூற்றினர்.
யூனுஸ் (அலை), நைனுவா மக்களிடம் "நீங்கள் நல்வழிக்குத் திரும்பவில்லையென்றால் அல்லாஹ்வின் கோபப் பார்வை உங்கள் மீது இறங்கிவிடும்" என்று எச்சரித்தார்கள்.
அதற்கு அந்த நைனுவா மக்கள், இறைவனுக்குப் பயப்படாமல் இறைத்தூதரைக் கிண்டல் செய்தார்கள். இதனால் மனம் வெறுத்து இறைவனின் அனுமதியில்லாமல் யூனுஸ் (அலை) அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.
எதிர்பார்த்த நாளில் வேதனை இறங்கவிருக்கிறது என்று அறிந்து கொண்ட மக்கள் சிரம் தலையில் படும்படி தங்களைத் தாழ்த்தி மண்டியிட்டு உள்ளத்தூய்மையுடன் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு, அவர்கள் மீது இறைவன் கருணை புரியும்படி அழுது மன்றாடினார்கள். இறைவனும் அவர்களை மன்னித்தான்.
மக்கள் மனம் திருந்திவிட்டார்கள் என்பதை அறியாமல் யூனுஸ் (அலை) அங்கிருந்து கோபமாக வெளியேறிய போது, இறைவன் அவர்களை நெருக்கடிக்கு ஆளாக்க மாட்டான் என்று எண்ணியிருந்தார்கள். ஆனால் அங்கு காட்சி மாறியது. யூனுஸ் (அலை) அவர்களை நெருக்கடி துரத்தியது.
திருக்குர்ஆன் 10:98, 21:87
- ஜெஸிலா பானு
Next Story






