search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கீழவாஞ்சூர் தர்காவில் சந்தனம்பூசும் நிகழ்ச்சி
    X

    கீழவாஞ்சூர் தர்காவில் சந்தனம்பூசும் நிகழ்ச்சி

    காரைக்காலை அடுத்துள்ள நாகூர் தர்கா பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது.
    காரைக்காலை அடுத்துள்ள நாகூர் தர்கா பிரசித்தி பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு அடக்கமாகி இருக்கும் நாகூர் ஆண்டவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஹலரத் செய்யது சாகுல்ஹமீது பாதுஷா நாயகம், சுமார் 460 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் பூமிக்கடியில் 41 நாட்கள் தவம் இருந்து பல அற்புதங்களை நிகழ்த்தினார்.

    அவ்வாறு நாகூர் ஆண்டவர் தவம் இருந்த இடத்தில் உள்ள தர்காவில், நாகூர் ஆண்டவர் தவம் இருந்ததை நினைவு கூரும் வகையில் நாகூர் தர்கா போர்டு ஆப் டிரஸ்ட் சார்பில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 459-வது கந்தூரிவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினமும் மாலையில் மவுலூது மற்றும் ராத்திபு ஓதப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சந்தனம்பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி நாகூரில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு நள்ளிரவு 12 மணியளவில் தர்காவை வந்தடைந்தது. தொடர்ந்து அந்த சந்தனக்கூடு, தர்காவை மூன்று முறை சுற்றி வலம் வந்ததும், அதிலிருந்து சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு தர்காவிற்குள் எடுத்துச்செல்லப்பட்டது.

    பின்னர் நாகூர் ஆண்டவர் தவம் இருந்த புனித இடத்தில் சந்தனம் பூசப்பட்டது. தொடர்ந்து பாத்திஆ மற்றும் விசேஷ துஆ ஓதப்பட்டது. நிகழ்ச்சியில் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் ஷேக்ஹுசைன் சாபு காதிரி, நாகூர் பரம்பரை கலீபா சாபு, பரம்பரை நாட்டாமைக்காரர்கள், கீழவாஞ்சூர் மற்றும் காரைக்கால், நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×