search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்
    X

    திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்

    • ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.
    • இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடினால் வியாதிகள் குணமாகும்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சுகந்த பரிமளேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அன்னை சக்தி இங்கு 'பெரியநாயகி' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர்- பெரியநாயகி அம்பாளை மனமுருகி வேண்டினால், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    இதேபோல் நாக தோஷம், புத்திர தோஷம் மற்றும் ராகு-கேதுவுக்கு பரிகார தலமாகவும் இந்தக் கோவில் விளங்குகிறது.

    தீராத வியாதி உள்ளவர்கள், இங்குள்ள குளத்தில் 48 நாட்கள் நீராடி, மண்டபத்தில் தங்கி சுவாமியையும்-அம்பாளையும் வழிபட்டால் வியாதிகள் குணமாகி பூரண நலமுடன் திரும்புவார்கள்.

    Next Story
    ×