search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் திருமண தடை நீங்கும்....
    X

    புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால் திருமண தடை நீங்கும்....

    • மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது.
    • நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் சித்திக்கும்.

    சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி. திருமணமாகாத பெண்கள், இந்தப் புரட்டாசி மாத நாட்களில் தினமும் திருமாலை வழிபட்டு வந்தால், விரைவில் நல்ல வரன் அமைந்து கல்யாண வரம் பெறுவார்கள் என்பது உறுதி.

    புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் அதிகாலையில் குளித்து, பூஜை அறையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிட்டு, பூ வைத்து, பெருமாளின் திருஉருவத்துக்குப் பொட்டிட்டு, பூக்களால் அலங்கரித்து வைக்க வேண்டும். பிறகு சுத்தமான பச்சரிசியை சன்னமாக இடித்து மாவெடுத்து, அத்துடன் வெல்லம் கலந்துப் பிடித்துவைக்க வேண்டும். இதில் திரி-நெய் இட்டு விளக்கேற்றி, மலர், துளசி, அட்சதை கொண்டு பெருமாளை அர்ச்சித்து, அவரின் திருநாமங்களை மனதாரச் சொல்லி வழிபட வேண்டும். அப்படிச் செய்தால் அந்த இடத்தில் பெருமாளே எழுந்தருள்வார் என்பது ஐதீகம்.

    ஆண்டின் எல்லா நாட்களிலும் திருப்பதியில் இப்படி ஒரு வழிபாட்டினை, பல பெண்கள் கோவிலின் பல இடங்களில் செய்வதைப் பார்க்கலாம். திருமண வரம் பெற இது அற்புதமான வழிபாடு என்று பெரியோர்கள் கூறுவார்கள். புரட்டாசி மாதத்தில் காலை நேரத்தில், வீடுகளில் திருவிளக்கு மாவு கொண்டு பெருமாளை வழிபட்டுவிட்டு, மாலையில் கோவிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால், மிகவும் சிறப்பு என்கின்றனர்.

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் புரட்டாசி சனிக் கிழமைகளில், நரசிம்மர் திருவீதி உலா நடை பெறுவது விசேஷம். அவ்வேளையில் மாவிளக்கு பூஜை செய்வது சாலச் சிறந்தது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமன்றி, எல்லா சனிக்கிழமைகளிலும் வெல்லம் கலந்த அரிசி மாவில் நெய்விளக்கிட்டு, நாராயணனை வழிபடுவதால் இல்லத்தில் சகல மங்கலகாரியங்களும் சித்திக்கும், வளங்கள் பெருகும்.

    Next Story
    ×