search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீவாஞ்சியம்
    X
    குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீவாஞ்சியம்

    குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீவாஞ்சியம்

    கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
    கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம், காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது. காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத்தலம், குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.

    இறைவன்- வாஞ்சிநாதேஸ்வரர், இறைவி- மங்களநாயகி. இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி செய்து வந்தால் நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால், பித்ரு தோஷ நிவர்த்தியாகும். ராகு-கேதுவை வழிபட்டு வந்தால், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத்தலத்தில் ஓர் இரவு தங்கினாலே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும் என்று புராணங்கள் இத்தல சிறப்பை எடுத்துரைக்கின்றன. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி, இறைவனையும், அம்பாளையும், மகாலட்சுமியையும் வழிபட்டால், பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.
    Next Story
    ×