search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காகத்திற்கு உணவு
    X
    காகத்திற்கு உணவு

    பித்ரு தோஷம் நீக்கும் வழிமுறைகள்

    நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள, கருட புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
    நமது குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள, கருட புராணம் மிக எளிமையான வழிமுறைகளை தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

    இறந்தவர் ஆன்மா சாந்தியடைய நமது முன்னோர்கள், பல்வேறு வழிமுறைகளை கையாண்டனர். ஒருவர் இறந்தவுடன் அவருக்கு செய்ய வேண்டிய பிண்டம் இடுதல், திதி தோறும் அவருக்குரிய கடமைகளை செய்தல் போன்றவற்றை செய்யாமல் இருந்தால், இறந்தவரின் ஆன்மா பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்படும். அப்படி அந்த ஆன்மா அவதிப்படும்போது, அது அவரது சந்ததியினரையும் பாதிப்படைய வைக்கும். இதைத்தான் ‘பித்ரு தோஷம்’ என்று கூறுவார்கள்.

    ஒருவன் நல்லவனாகவும், தெய்வ பக்தி மிகுந்தவனாகவும் இருந்து இறந்தால், அவருக்கு பித்ரு கடன்களை சரியாக செய்யாவிட்டால், இறந்தவரின் குடும்பத்திற்கு பித்ரு தோஷம் கண்டிப்பாக ஏற்படும். ஆனால் பித்ருக்களுக்கு இறைவனின் ஆசி இருப்பதால் தோஷத்தின் தீவிரம் சற்று குறையும்.

    ஆனால் ஒருவன் மிக கொடூரமானவனாகவும், அடுத்தவர் மனைவி, அடுத்தவர் சொத்து போன்றவற்றை அபகரித்து, லஞ்சம், திருட்டு போன்ற கொடூரத்தில் ஈடுபடுவானாயின், அவன் இறந்த பிறகு அவனுக்குரிய பித்ரு காரியங்களை அவன் குடும்பம் செய்யாமல் விட்டுவிட்டால் இறந்தவனின் குடும்பத்தினருக்கு மிகப் பெரிய தீங்கு விளையும். இறந்தவனுக்கு இறைவனின் ஆசி இல்லாமல், நரக வேதனையில், பசி, தாகம் போன்றவற்றால் அவதிப்பட்டு அல்லல்படுவான். அப்படிப்பட்ட ஆன்மா படும் வேதனையின் தாக்கம் வீரியம் மிகுந்ததாக இருக்கும். அந்த தாக்கம் அவனது குடும்பம், மற்றும் சந்ததியினரையும் மிகவும் கொடூரமாகத் தாக்கும்.

    பித்ரு தோஷம் உள்ளவன் வீட்டில் அதிகம் நடைபெறும் செயல்களைப் பார்ப்போம். செய்யும் செயல்களில் அதிகமாக பாவம் உண்டாகும். லஞ்சம், லாவணியம் போன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும்.

    குழந்தைகள் பிறந்து, பிறந்து இறப்பார்கள். சுற்றத்தாரோடு ஒற்றுமை இல்லாமல் மனம் வேறுபட்டு வாழ்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இன்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். பசுக்களுக்கு உணவு வழங்க முடியாமல் போகும். நல்ல நண்பனோடு விரோதிக்க நேர்ந்து, நல்ல நட்புகள் ஏற்படாமல் போகும். ஹரி பக்தி செய்ய முடியாமல் வாழ்நாள் வீணாகும். ஜெப ஹோமங்களைச் செய்ய முடியாமல் போகும்.

    தந்தை தாயாரை இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களும் நடைபெறும். பணம் மற்றும் சொத்து, பொன் பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும். இழிந்தோர் செய்யும் தொழிலைச் செய்து பிழைக்க நேரிடும்.

    அதர்மங்களையே செய்யத் தூண்டும் எண்ணம் மனம் முழுவதும் எழும். பிதுர் கர்மங்களை செய்வதில் தடை ஏற்பட்டு போகும். புத்திரன் பகைவனைப் போல மாறும் சூழல் ஏற்படும். மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை உருவாகும்.

    இதுபோன்ற பிரச்சினை தீரவேண்டும் எனில் பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள். பித்ரு கடன் என்ன என்பதை கேட்டு அறிந்து அதன்படி உங்கள் பித்ருக்களை திருப்திப் படுத்தினாலே மேற்கண்ட கெடுதல்களில் இருந்து எளிதாக நீங்கள் தப்பிக்கலாம். அமாவாசை, பவுர்ணமி திதிகளில் விரதம் இருந்து காலையில் எள் கலந்த சாதம் காகத்திற்கு வைக்கவும், அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விடுங்கள். ஆதரவற்ற, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள். அன்று மாலை சிவன் அல்லது ஏதாவது உங்களுக்கு பிடித்த கோவிலுக்கு செல்லுங்கள். எந்த தோஷமும் அண்டாது.
    Next Story
    ×