search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அன்பிற்பிரியாள் அம்மன்
    X
    அன்பிற்பிரியாள் அம்மன்

    குழந்தைப்பேறு வழங்கும் பூளவாடி அன்பிற்பிரியாள்

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அன்பிற்பிரியாள் அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு வழங்கும் கோவிலாகத் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள பூளவாடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்பிற்பிரியாள் அம்மன் கோவில் இருந்து வருகிறது.

    சிவபெருமானின் அன்பில் பிரியாது இருக்கும் பார்வதிதேவி, தன் பக்தர்களிடமும் அன்பு கொண்டு அவர்கள் வேண்டியதை வழங்குவாள் எனும் கருத்தில், இக்கோவிலின் இறைவி, ‘அன்பிற்பிரியாள்’ என்று அழைக்கப்படுகிறார்.

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கை. இதே போல் தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி வாழ்வில் வளமடைய வேண்டியும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் திருவிடை மருதூர் கோவிலுக்கு வந்த போது, வழியெங்கும் லிங்கமாக இருந்ததால், அவர் அங்கே கால் வைக்க அஞ்சி நின்றார். அதனைக் கண்ட இறைவன், திருஞானசம்பந்தரை அழைத்து வரும்படி இறைவியிடம் சொன்னார். அவரும் திருஞானசம்பந்தரைக் குழந்தை போல், தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்தார். இந்த அம்பிகை, இறைவனுடன் கயிலாயத்தின் மீது காட்சி தருகிறாள். இவளை ‘அன்பிற் பெரியாள்’ என்று அழைக்கின்றனர். குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இந்த அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் பூளவாடி உள்ளது. திருப்பூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தாராபுரம் நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
    Next Story
    ×