search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமண தடை நீக்கும் விஷ்ணு துர்க்கை
    X

    திருமண தடை நீக்கும் விஷ்ணு துர்க்கை

    திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் விஷ்ணு துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர்.
    மகிஷன் என்ற அரக்கனை வதம் செய்த துர்க்கை ரத்த வெறியில் பிரமையுடன் திளைத்த போது, இங்குள்ள இறைவன் மாணிக்க வண்ணரால் அவளது ரத்தப் பிரமை நீக்கப் பெற்றது. வேண்டுபவர்களுக்கு வேண்டுவதை அருளும் வண்ணம் துர்க்கை அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.

    தேவக் கோட்டத்தின் தென் திசையில் உள்ள இந்த துர்க்கைக்கு தனியாக ஒரு சன்னிதியே உள்ளது. இந்த துர்க்கையை வழிபடுவோருக்கு நவக்கிரக தோஷம் நீங்குவதுடன், பில்லி, சூன்யம், சித்தபிரமையும் நீங்குவது நிஜம்.

    இந்த துர்க்கையை பிரார்த்தனை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் விலகுவது உண்மை என சொல்கின்றனர் பக்தர்கள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்களுக்கு விரைந்து திருமணம் நடக்கவும், குழந்தை பேறு வேண்டி பெண்களும் இந்த துர்க்கையை வேண்டிக் கொள்கின்றனர்.



    இப்படி வேண்டிக் கொள்ளும் பெண்கள் தங்களது வயது எண்ணிக்கையில் தீபமேற்றி, துர்க்கைக்கு அபிஷேகம் செய்து, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், பழம், பூ, நாணயம் இவைகளை கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் தானம் கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய துர்க்கைக்கு நன்றி கூறி மகிழ்கின்றனர். ஆலயத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இது ஆலயத்தின் எதிரே உள்ளது.

    பில்லி, சூன்யம் பாதிப்பு உள்ளவர்களை துர்க்கைக்கு எதிரே சன்னிதியில் அமரச்செய்து, கடம் வைத்து பூஜை செய்து, அந்த தண்ணீரை அவர்களுக்கு அபிஷேகம் செய்ய, பிணி கண்டவர்கள் குணமாகும் காட்சி நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சி.

    7 தினங்கள் தொடர்ந்து துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, 7-ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புதுப்புடவை சாத்தினால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள். இந்த துர்க்கைக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி நாட்களில் நடைபெறும் ராகு கால பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
    Next Story
    ×