என் மலர்
ஆன்மிகம்

தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 18-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனியும், ஜெபமாலையும் நடக்கிறது. 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்குகிறார். சரல் பங்கு தந்தை அருட்பணியாளர் உபால்டு மறையுரை ஆற்றுகிறார். பின்னர் அலங்கார அன்னையே என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தூய உபகார மாதா சொரூபம் அறிமுகம் நடக்கிறது.
10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் அதிகாலை பழைய கோவிலில் திருப்பலியும், அதன்பிறகு காலை திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலை செபமாலையும், திருப்பலியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலையும் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தாழையங்கோணம் பங்குதந்தை சூசை தலைமை தாங்குகிறார். அசிசி பங்குதந்தை ரொனால்டுரெக்ஸ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு திருசப்பர பவனி நடக்கிறது.
16-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலையும் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்குகிறார். கோட்டாறு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல்ஏஞ்சல் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு திருசப்பர பவனி நடக்கிறது.
17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மேலமணக்குடி இணை பங்குதந்தை ஜாண்பெனிட்டோ தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும் மாலை ஆராதனையும்் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மதுரை உயர்் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர்பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். அமராவதிவிளை பங்குத் தந்தை ஜோசப்ரொமால்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 18-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர்ரெம்ஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரோமியஸ் தலைமை தாங்குகிறார், ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு இயக்குனர் நெல்சன் மறையுரை ஆற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்ச்சை கொடிகள் பவனி, 5.30 மணிக்கு திருக்கொடி பவனியும், ஜெபமாலையும் நடக்கிறது. 6 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மறை மாவட்ட செயலாளர் அருட்பணியாளர் பெலிக்ஸ் தலைமை தாங்குகிறார். சரல் பங்கு தந்தை அருட்பணியாளர் உபால்டு மறையுரை ஆற்றுகிறார். பின்னர் அலங்கார அன்னையே என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து தூய உபகார மாதா சொரூபம் அறிமுகம் நடக்கிறது.
10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தினமும் அதிகாலை பழைய கோவிலில் திருப்பலியும், அதன்பிறகு காலை திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலை செபமாலையும், திருப்பலியும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலையும் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு தாழையங்கோணம் பங்குதந்தை சூசை தலைமை தாங்குகிறார். அசிசி பங்குதந்தை ரொனால்டுரெக்ஸ் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு திருசப்பர பவனி நடக்கிறது.
16-ந் தேதி மாலை 6.30 மணிக்கு செபமாலையும் திருப்பலியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்குகிறார். கோட்டாறு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல்ஏஞ்சல் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு திருசப்பர பவனி நடக்கிறது.
17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்புத் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மேலமணக்குடி இணை பங்குதந்தை ஜாண்பெனிட்டோ தலைமை தாங்குகிறார். மாலை 6.30 மணிக்கு செபமாலையும் மாலை ஆராதனையும்் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு மதுரை உயர்் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர்பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். அமராவதிவிளை பங்குத் தந்தை ஜோசப்ரொமால்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும் 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
10-ம் நாள் திருவிழாவான 18-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர்் திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர்ரெம்ஜியூஸ் தலைமை தாங்குகிறார். காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் ஜெரோமியஸ் தலைமை தாங்குகிறார், ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு இயக்குனர் நெல்சன் மறையுரை ஆற்றுகிறார். 9 மணிக்கு இரு தங்கத்தேர் பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இரவு 10.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
Next Story






