என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செட்டிச்சார்விளை குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலய அர்ச்சிப்பு விழா
Byமாலை மலர்4 Oct 2021 4:24 AM GMT (Updated: 4 Oct 2021 4:24 AM GMT)
செட்டிச்சார்விளை குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து வைத்தார்.
செட்டிச்சார்விளை தூய குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம் புதுப்பித்து அர்ச்சிப்பு விழா மற்றும் கொடியேற்றம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் கோட்டார் மறை மாவட்ட முன்னாள்ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி புதுப்பிக்கப்பட்ட புதிய ஆலயத்தை ஜெபித்து அர்ச்சித்து திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து வியாகுலமாதா புதிய குருசடியையும் அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வகிக்தார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரத்தினம், மறை மாவட்ட செயலர் ரசல்ராஜ், அருட்பணி கிலாரி ஆகியோர் சிற்பக் கலைஞர் ஜான் குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவுபரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் ரதி ஏஜென்சி உரிமையாளரும், தி.மு.க. மேற்கு மாவட்ட துணை செயலாளருமான ஜான் கிறிஸ்டோபர் உள்பட பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவானது அரசு வழிகாட்டிதலின்படி அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணை செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபரியல் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
அதைதொடர்ந்து வியாகுலமாதா புதிய குருசடியையும் அர்ச்சித்து திறந்து வைத்து திருப்பலி நிறைவேற்றினார். பங்குத்தந்தை டேவிட் மைக்கேல் முன்னிலை வகிக்தார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் இயேசு ரத்தினம், மறை மாவட்ட செயலர் ரசல்ராஜ், அருட்பணி கிலாரி ஆகியோர் சிற்பக் கலைஞர் ஜான் குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவுபரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் ரதி ஏஜென்சி உரிமையாளரும், தி.மு.க. மேற்கு மாவட்ட துணை செயலாளருமான ஜான் கிறிஸ்டோபர் உள்பட பங்கு மக்கள், பங்கு பேரவையினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவானது அரசு வழிகாட்டிதலின்படி அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு பேரவை துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் ததேசாள், துணை செயலாளர் ஜஸ்டின் தாஸ், பொருளாளர் செல்வன் கபரியல் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X