search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பாவத்தளையிலிருந்து மனுகுலத்தை மீட்ட இயேசு

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும் மற்றொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதுதான்.
    சாவை வென்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.[தந்தை..... மகன்......] அகிலம் ஆளும் இறைவனின் பேரன்பால், தம் ஒரே மகனையே மனுகுலத்திற்கு கையளித்து ,அந்த ஒரே மகன் நம் பாவங்களால் பாரச்சிலுவை சுமந்து, சிலுவையில் அறையுண்டு, கல்லறையில் அடக்கப்பட்டு, காவல் காக்கப்பட்ட இயேசு, இன்று வெற்றி வீரராய் உயிர்த்தெழுந்தார்.

    அவரது பாடுகளில் பங்கேற்று, அவரது துன்பத்தில் துணை நின்ற நாம்,அவரது உயிர்ப்பின் மகிழ்வையும் கொண்டாட அழைக்கப்படுகிறோம்.இயேசுவின் உயிர்ப்பு நம்மை புது வாழ்வு வாழ அழைக்கின்றது. புதிய மாற்றத்திற்கு வழிகாட்டுகிறது, புதிதாய் பிறக்கத் தூண்டுகிறது. உலக வரலாற்றில் கல்லறைக்கு காவல் காத்ததும், காலியான கல்லறை எனப் பெயர் பெற்றதும் இயேசுவின் கல்லறை மட்டும் தான்.

    இன்று மகிழ்ச்சியின் நாள், வெற்றியின் நாள்,நம் அனைவருக்கும் புதுமையின் நாள்,தன் மகனின் பாடுகளோடு ஒன்றித்து, வியாகுலத்தின் தாயாக விளங்கிய நம் அன்னை இன்று தம் மகனின் உயிர்ப்பால் வெற்றியின் அரசியாக திகழ்கிறாள் தம் மகனின் உயிர்ப்பில் மகிழ்ந்து அக்களிப்பு கொள்கிறாள். தனக்கு நிகழ்ந்த வியாகுலத்தை, துன்பத்தை, துயரத்தை, துணிந்து ஏற்று, அதை மீட்பின் கருவியாக மாற்றிய நம் அன்னையின் துணிவைப் போற்றுவோம்.

    தம் மகனின் பணியில் மட்டுமல்ல், பாடுகளிலும் இறுதிவரை உடனிருந்து, மனுக்குல மீட்புக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்த அன்னைமரியாள், இன்று உயிர்ப்பின் ஆற்றல் பெற்று, வானக அரசியாகத் திகழ்கிறாள்.இத்தகைய நம் அன்னைக்கு மணிமுடி சூட்டி, மங்கள திலகமிட்டு, மலர்தூவி வாழ்த்துவோம். [பாடல் . வானக அரசியே] வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் , நறுமணப்பொருட்களுடன் இயேசுவின் கல்லறைக்குச் சென்ற பெண்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

    அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். இயேசுவை காணவில்லையே என்ற ஏக்கத்துடன் பார்த்த போது வானதூதர் அவர்களிடம் " திகிழுற வேண்டாம். அவர் சொன்னது போல் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்பட்டார். இயேசு தம் சீடருக்கு காட்சி கொடுத்த போதும் சொல்லுகின்ற முதல் வார்த்தை `அஞ்சாதீர்கள்' என்பது தான். வானதூதரும், இயேசுவும் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட சீடர்கள் பயத்திலிருந்து விலகி, அஞ்சா நெஞ்சத்தினராய் அகிலமெகும் சென்று, ஆர்வத்துடனும் , ஆற்றலுடனும் இயேசுவைப் பற்றி போதித்தார்கள்.

    இயேசு தம் சீடருக்குச் சொன்ன அதே வார்த்தைகளை , இன்று நமக்கும் சொல்கிறார். நமது வாழ்க்கை நிகழ்வுகளில் அச்சத்தை தவிர்த்து துணிவுடன் வாழ அழைக்கிறார்.தீமைக்கு அஞ்சுவோம், நன்மையை துணிந்து செய்வோம். நன்மைக்கும், தீமைக்கும் ஏற்படுகின்ற போட்டியில் கடைசியில் வெல்வது என்னவோ நன்மைதான். நன்மைதான் வெற்றி பெறும் என்பதை இயேசு தம் உயிர்ப்பால் இந்த உலகிற்கு எடுத்துரைக்கிறார்.

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நமக்கு எடுத்துரைக்கும் மற்றொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு செய்தியை எல்லாருக்கும் அறிவிக்க வேண்டும் என்பதுதான்.வானதூதர் கல்லறைக்கு வந்த பெண்களிடமும் , சீடர்களிடமும் `சொல்லுங்கள் ` என்று சொல்கிறார். இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்லி ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புக்கு சாட்சிகளாக விளங்குகிறார்கள்.

    இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா மகிழ்வில் திளைத்திருக்கும் நாம் அஞ்சா நெஞ்சத்தோடு ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிப்போம். அதன் வழியாக இறையருள் நிறைவாய்ப் பெருவோம். [பாடல்] அரசன் ஒருவன் எல்லா நிலையிலும் , இன்பத்திலும், துன்பத்திலும், வாழ்விலும் , சாவிலும் சிரிப்பிலும் , அழுகையிலும், வளமையிலும் , வறுமையிலும் பயன்படும் ஒரு மந்திரத்தை கண்டு பிடிக்க நினைக்கிறார். அவரது கேள்விகளுக்கு பதிலாக புத்தர் கண்டுபிடித்ததுதான் 'இந்த நிலையும் கடந்து போகும்.

    ' இயேசுவுக்குத் தெரிந்தது எல்லாம் கடந்து என்று. ஓசன்னா கடந்து விடும் , குருத்தோலைகள் கடந்து விடும் , கெத்சமணி கடந்து விடும் , பிலாத்தின் அரண்மனை கடந்து விடும் , ஏரோதின் மாளிகை கடந்து விடும் , சிலுவைப்பாடுகள் கடந்து விடும் , எல்லாம் கடந்து விடும் , இறப்பும் கடந்து விடும் என்று. இறப்பைக் கடத்தியது இயேசுவின் உயிர்ப்பு. நமது அன்றாட வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகின்ற அத்தனை நிகழ்வுகளும் நம்மைவிட்டு கடந்து விடும் என்பதை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

    இயேசு கிறிஸ்து சாவை வென்று உயிர்த்து விட்டார்.தீமையை வென்று இவ்வுலகத்தை நன்மையால் நிரப்பியுள்ளார். இருளிலிருந்து நமமை ஒளிக்கு அழைத்து வந்திருக்கிறார், பாஸ்கா ஒளி நம்மிடத்திலுள்ள இருளை அழித்து, புது வாழ்வைத் தர ,இயேசுவின் ஒளியில் நமது பயணம் தொடர , அருள் வேண்டி நம் கையிலிருக்கும் ஒளியை இறைப்பதம் அர்ப்பணிப்போம். (பரலோகத்தில்)
    Next Story
    ×