என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வில்லியனூர் லூர்து மாதா திருத்தல ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்12 April 2021 3:20 AM GMT (Updated: 12 April 2021 3:20 AM GMT)
வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டுவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது.
வில்லியனூரில் பிரசித்திபெற்ற லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து 6-வது நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும்.
அதன்படி 144-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் முகப்பில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றினார்.
இதில் ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து காலை 7 மணிக்கும், பகல் 11.30 மணிக்கும் திருப்பலிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கொரோனா நடவடிக்கையாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது. வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
18-ந்தேதி காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது.
அதன்படி 144-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆலயத்தின் முகப்பில் உள்ள கொடி மரத்தில் சென்னை மறை மாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றினார்.
இதில் ஆலய பங்குத்தந்தை பிச்சைமுத்து மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து காலை 7 மணிக்கும், பகல் 11.30 மணிக்கும் திருப்பலிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கொரோனா நடவடிக்கையாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் நவநாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலிகள், தேர் பவனி நடக்கிறது. வருகிற 17-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் முன்னாள் ஆயர் சிங்கராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
18-ந்தேதி காலை 7.30 மணிக்கு புதுவை- கடலூர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அதன்பின் மாலை 6 மணிக்கு புதுவை- கடலூர் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் திருப்பலியும், அதனை தொடர்ந்து பெருவிழா ஆடம்பர தேர் பவனியும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X