என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலயத்தில் தேர் பவனி
Byமாலை மலர்1 March 2021 5:02 AM GMT (Updated: 1 March 2021 5:02 AM GMT)
ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்ட் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.
தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் ஜெபமாலை, மாலை ஆராதனை, திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் திருப்பயணிகள் திருப்பலி, இரவு வாணவேடிக்கை போன்றவை நடந்தன.
விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடந்தன. அலங்கரிக்கப்பட்ட வியாகுல அன்னை தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வீதி வீதியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும், பின்னர் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது.திருவிழா ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
தொடர்ந்து வந்த திருவிழா நாட்களில் ஜெபமாலை, மாலை ஆராதனை, திருப்பலி, மறையுரை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் திருப்பயணிகள் திருப்பலி, இரவு வாணவேடிக்கை போன்றவை நடந்தன.
விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி, தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழில் திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடந்தன. அலங்கரிக்கப்பட்ட வியாகுல அன்னை தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வீதி வீதியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும், பின்னர் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகமும் நடைபெற்றது.திருவிழா ஏற்பாடுகளை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X