என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது
Byமாலை மலர்26 Feb 2021 7:21 AM GMT (Updated: 26 Feb 2021 7:21 AM GMT)
இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
உபவாசம் என்பது இந்த தவக்காலத்தில் மட்டும் கடைபிடிக்கப்பட வேண்டியது அல்ல. நாம் எப்போது வேண்டுமானாலும் உபவாசம் இருந்து கடவுளோடு நம் உறவை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த தவக்காலத்தில் உபவாசம் இருப்பது என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஏனென்றால் நாம் பல்வேறு விஷேச நாட்களில் பல்வேறு சிறப்பான உணவுகளை உண்பது போல இந்த தவக்காலத்தில் நாம் மிகவும் உபவாசம் இருந்து தேவனை மகிமைப்படுத்தி இன்னும் அதிகமாக கர்த்தரிடத்தில் நெருங்கி சேர அழைக்கப்படுகின்றோம்.
எனவே இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மை பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும். அதே போல நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணங்களையும் பெற்று கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தியே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தவறுகளுக்காக மனம் மாறுதல், மன்னிப்பு கேட்டல் ஆகியவை நம்மை மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெயத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. இந்த மூன்று காரியங்களும் ஒன்று சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நிகழ்கிறது.
எனவே இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
சகோ. மைக்கேல், காங்கேயம் ரோடு, திருப்பூர்.
எனவே இந்த நாளில் நம்முடைய வாழ்க்கையில் இரண்டு காரியங்களை முக்கியமாக செய்ய வேண்டும். அதாவது நாம் நம்மை பரிசோதித்து நம் வாழ்வில் காணப்படும் தேவையற்றவைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும். அதே போல நம் வாழ்க்கைக்கு தேவையான நல்ல குணங்களையும் பெற்று கொள்வது மிகவும் அவசியமானதாகும்.
மனம் வருந்துதல், மனம் மாறுதல் மற்றும் மன்னிப்பு கேட்டல் ஆகிய மூன்றும் யாரிடம் காணப்படுகிறதோ அவர்களின் உபவாச ஜெபத்தியே கர்த்தர் கேட்கிறார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நம்முடைய தவறுகளுக்காக மனம் மாறுதல், மன்னிப்பு கேட்டல் ஆகியவை நம்மை மாற்றுகிறது. அதற்கு உபவாச ஜெபம் நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
உபவாசத்தோடு காணப்பட வேண்டிய 2 முக்கிய அம்சங்கள் ஜெபமும், விசுவாசமும் ஆகும். ஜெபம், விசுவாசம் மற்றும் உபவாசம் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்தது. ஜெயத்திற்கு விசுவாசம் தேவை. விசுவாசம் வளர ஜெபம் தேவை. இவை இரண்டும் தொடர உபவாசம் தேவை. இந்த மூன்று காரியங்களும் ஒன்று சேரும் போது நம்முடைய வாழ்க்கையில் அற்புதம் நிகழ்கிறது.
எனவே இந்த தவக்காலத்தில் நாம் உபவாசம் இருந்து தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்து நம்முடைய வாழ்க்கையை மாற்ற முயற்சி செய்வோமாக ஆமென்.
சகோ. மைக்கேல், காங்கேயம் ரோடு, திருப்பூர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X