search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    பெற்றோருக்கு கீழ்படிய வேண்டும்

    தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.
    இறைவன் இந்த உலகத்தின் ஒவ்வொரு படைப்புகளையும் அர்த்தமுள்ளாகவே படைத்துள்ளார். அது போலவே மனிதனையும் படைத்துள்ளார். அதுவும் அவருடைய சாயலாகவே படைத்துள்ளார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இப்படி தேவ சாயலாக உள்ள மனிதனின் வாழ்வில் முக்கியமானது வாலிப பருவம். இந்த வாலிப பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை சீரமைக்கின்றன. எனவே இந்தவாலிப பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம்.

    அன்றைய நாட்களிலே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம், காலையில் எழுந்தவுடன் வேதம் வாசிக்க வேண்டும். கோவிலுக்கு செல்ல வேண்டும். பின்னர் படிக்க வேண்டும். பெரியவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரையும் மதிக்க வேண்டும் என்று நல்ல பழக்கங்களை கற்று கொடுத்தனர். ஆனால் இந்த காலத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இப்படி இருக்கக்கூடாது. நன்றாக படிக்கவேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை பார்த்து போதும் நிறுத்துங்கள் என்று கூறி தங்கள் பெற்றோர்களின் வாயை அடைத்து விடுகின்றனர்.

    மேலும் இப்போது வாலிபர்களின் நிலை காலையில் எழுத்தவுடன் எது இப்படி இருந்தால் என்ன எங்கு என்னுடைய செல், யார், யார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்கள், யார் எனக்கு போன் செய்துள்ளார்கள் என்று பல்வேறு விஷயங்களை செல்போனிலேயே தேடிக்கொண்டிருக்கிறனர்.

    இப்படி செல்போனில் ஒவ்வொன்றாக தேடிக்கொண்டிருப்பதினால், பெற்றோர்களின் அன்பு, உறவுகளின் நட்பு கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டு அவனின் வாழ்க்கை தடுமாற்றத்தில் முடியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    ஆனால் இயேசுவோ, தன் வாலிப பருவத்தில் தான் இறை வாழ்க்கையை ஆரம்பித்தார். அவருடைய இளைமையான துடிப்பும், தேவனின் அருளும் அவர் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுத்தன. அவர் எப்போதுமே விண்ணாக தந்தையோடு ஜெபத்தில் நிலைத்திருந்து, பெற்றோருக்கு கீழ்படிந்தவராக வாழ்ந்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    வேதாகமத்தில் பிரசங்கி 11-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாமிசத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும், வாலிபமும் மாயையே என்று சொல்லப்பட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே நாமும் எப்போதும் செல்போனை உபயோகப்படுத்தாமல் கடவுளுக்கு நேரத்தை ஒதுக்கி பெற்றோர்களுக்கு கீழ்படிந்து இந்த வாலிப பருவத்தில் உள்ளத்திலே நல்ல சிந்தனைகளை சிந்தித்து செயல் பட இந்த தவக்காலத்தில் தீர்மானிப்போம். வெற்றி பெறுவோம்.

    சகோ.சாம்ராஜ், கோவில்வழி.
    Next Story
    ×