என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொடைக்கானல் புனித அந்தோணியார் ஆலய திருவிழா: மின் அலங்கார தேர்பவனி நடந்தது
Byமாலை மலர்15 Feb 2021 4:18 AM GMT (Updated: 15 Feb 2021 4:18 AM GMT)
கொடைக்கானலில் உள்ள புனித அந்தோணியார் ஆலய நூற்றாண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடைக்கானலில் உள்ள புனித அந்தோணியார் ஆலய நூற்றாண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மறையுரை சிந்தனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு ஆலய நூற்றாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து புனித அந்தோணியாரின் இரவில் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலையில் ஆலயத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று மதுரை நொபிலி மெட்ரிக் பள்ளி முதல்வர் அடைக்கலராஜ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் பகல் நேர சப்பர பவனி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, உதவி பங்குதந்தையர்கள் பென்னி லாரன்ஸ் ஜஸ்டின், அருள் ஜஸ்டின், புனித அந்தோணியார் சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து புனித அந்தோணியாரின் இரவில் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலையில் ஆலயத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று மதுரை நொபிலி மெட்ரிக் பள்ளி முதல்வர் அடைக்கலராஜ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் பகல் நேர சப்பர பவனி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, உதவி பங்குதந்தையர்கள் பென்னி லாரன்ஸ் ஜஸ்டின், அருள் ஜஸ்டின், புனித அந்தோணியார் சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X