என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்25 Jan 2021 4:00 AM GMT (Updated: 25 Jan 2021 4:00 AM GMT)
பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
பெரிய காடு புனித அந்தோணியார் திருத்தலமானது தனிப் பங்காக உதயமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி பொன்விழா மற்றும் திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 7-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
நாளை அதிகாலை 5.30 மணிக்கு பொன்விழா பொங்கல், காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார்.
27-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் திருப்பலிக்கு குளச்சல் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். விழாவை தொடர்ந்து தினமும் மாலை செப மாலையும், திருப்பலியும் அருட்பணியாளர்களின் மறையுரையும் நடக்கிறது.
வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது. இதற்கு அந்தோணியார்புரம் திரு இருதய ஆண்டவர் சபையின் அருட்பணியாளர் புஷ்ப தாசன் தலைமை தாங்க, எட்டாமடை இணை பங்கு தந்தை அன்பின் தேவ சகாயம் மறையுரையாற்றுகி றார். மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலிக்கு அனந்தன்நகர் பங்குத்தந்தை அல்போன்ஸ் தலைமை தாங்க, புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.
6-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். கிறிஸ்து நகர் பங்குத்தந்தை வில்சன் மறையுரையாற்றுகிறார்.
7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குளச்சல் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்க, அழிக்கால் பங்குத்தந்தை ஜெல்பரின் மறையுரையாற்றுகிறார்.
காலை 11 மணி திருப்பலிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்க, கன்னியாகுமரி இணை பங்கு பணியாளர் சுரேஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. இதற்கு மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியுஸ் தலைமை தாங்க, கேசவன் புத்தன் துறை பங்குத்தந்தை ஜெகன் மறையுரையாற்றுகிறார்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு தந்தைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
நாளை அதிகாலை 5.30 மணிக்கு பொன்விழா பொங்கல், காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு செபமாலை, கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார்.
27-ந்தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் செபமாலை மற்றும் திருப்பலிக்கு குளச்சல் பங்குத்தந்தை மரிய செல்வன் தலைமை தாங்க, அருட்பணியாளர் பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். விழாவை தொடர்ந்து தினமும் மாலை செப மாலையும், திருப்பலியும் அருட்பணியாளர்களின் மறையுரையும் நடக்கிறது.
வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்கு நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது. இதற்கு அந்தோணியார்புரம் திரு இருதய ஆண்டவர் சபையின் அருட்பணியாளர் புஷ்ப தாசன் தலைமை தாங்க, எட்டாமடை இணை பங்கு தந்தை அன்பின் தேவ சகாயம் மறையுரையாற்றுகி றார். மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலிக்கு அனந்தன்நகர் பங்குத்தந்தை அல்போன்ஸ் தலைமை தாங்க, புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார்.
6-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. இதற்கு மறை மாவட்ட செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார். கிறிஸ்து நகர் பங்குத்தந்தை வில்சன் மறையுரையாற்றுகிறார்.
7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து நடைபெறும் திருப்பலிக்கு குளச்சல் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்க, அழிக்கால் பங்குத்தந்தை ஜெல்பரின் மறையுரையாற்றுகிறார்.
காலை 11 மணி திருப்பலிக்கு ஆலஞ்சி வட்டார முதன்மை பணியாளர் ஜேசுதாசன் தலைமை தாங்க, கன்னியாகுமரி இணை பங்கு பணியாளர் சுரேஷ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. இதற்கு மறைமாவட்ட பொருளாளர் அலாய்சியுஸ் தலைமை தாங்க, கேசவன் புத்தன் துறை பங்குத்தந்தை ஜெகன் மறையுரையாற்றுகிறார்.
திருவிழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு தந்தைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X