search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருளாளர் தேவசகாயம் பிள்ளை
    X
    அருளாளர் தேவசகாயம் பிள்ளை

    மாடத்தட்டுவிளையில் நாளை அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அர்ச்சிப்பு விழா

    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    நாகர்கோவில் வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் 19 அடி உயரத்தில் அருளாளர் தேவசகாயம் பிள்ளை குருசடி அமைக்கப்பட்டுள்ளது. 

    இதன் அர்ச்சிப்பு மற்றும் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருப்பலி, இரவு 7 மணிக்கு குருசடி அர்ச்சிப்பு போன்றவை நடைபெறும். அருட்பணியாளர் அந்தோணி எம். முத்து தலைமை தாங்கி குருசடியை அர்ச்சி

    த்து திறந்து வைக்கிறார். பங்குத்தந்தை ஜெயக்குமார், இணைப் பங்குத்தந்தை ஷிஜின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணி பேரவை, கட்டிட குழு மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×