என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்11 Jan 2021 7:16 AM GMT (Updated: 11 Jan 2021 7:16 AM GMT)
புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புலியூர்குறிச்சி முட்டிடிச்சான் பாறை மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 14-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நாளை மாலை 5.30 மணிக்கு கொடிபவனி, செபமாலை, புகழ்மாலை நடக்கிறது. 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்கு முளகுமூடு பங்குத்தந்தை டோமினிக் கடாட்சதாஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார். திருத்தல அதிபர் ராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறார். மயிலோடு பங்குத்தந்தை ரோமரிக்ததேயு அருளுரையாற்றுகிறார். திருவிழா நாட்களில் காலை, மாலை திருப்பலி, ஜெபமாலை நடக்கிறது.
நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு மணலிக்கரை பங்குத்தந்தை மரிய டேவிட் தலைமை தாங்குகிறார். தக்கலை பங்குதந்தை வின்சென்ட் மறையுரையாற்றுகிறார்.
14-ந்தேதி காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு குழித்துறை மறைமாவட்டம் நிதி பரி பாலகர் அகஸ்டின் தலைமை தாங்குகிறார். வட்டம் பங்குத்தந்தை சகாயதாஸ் மறையுரையாற்றுகிறார்.
திருப்பலி முடிந்தவுடன் உதயகிரி கோட்டையில் உள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை தோட்டத்தை அருட்பணியாளர்கள் அர்ச்சிக்கிறார்கள்.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வட்டார முதன்மை பணியாளர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தைகள் மரியதாஸ், மரியதாசன் வின்சென்ட் ராஜ், பங்கு பேரவை உதவித் தலைவர் ஆல்பர்ட், செயலாளர் ஜெனி, உதவிச் செயலாளர் கிறிஸ்டிபாய், பொருளாளர் பாபு மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பக்த சபையினர் இணைந்து செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X