search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார்
    X
    புனித அந்தோணியார்

    நாகர்கோவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில், குருசடி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், குருசடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய திருவிழா, பங்கு குடும்ப விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் ேததி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. அருட்பணியாளர் யேசுரெத்தினம் தலைைம தாங்குகிறார். அருட்பணியாளர் சகாய பிரபு மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 16-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, இரவு 7 மணிக்கு ஆயருக்கு வரவேற்பு தொடர்ந்து மாலை ஆராதனை ஆகியவை நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 17-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தேரில் திருப்பலி, காலை 6.30 மணிக்கு திருவிழா ஆடம்பரத்திருப்பலி, 9.30 மணிக்கு சிறப்பு திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8 மணிக்கு கொடி இறக்கம் ஆகியவை நடைபெறும்.

    நாளை மற்றும் 16, 17-ந் ேததிகளில் நடைபெறும் திருப்பலி நாஞ்சில் நாதம் வலைத்தள தொலைக்காட்சியிலும், நாஞ்சில் நாதம் தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிப்பரப்பாகும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை பிரான்சிஸ் எம்.போர்ஜியா, பங்கு மேய்ப்புப்பணி பேரவை மற்றும் பங்குமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×