என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அற்புத குழந்தை இயேசு அன்பியம்
Byமாலை மலர்21 Oct 2020 7:31 AM GMT (Updated: 21 Oct 2020 7:31 AM GMT)
இரக்கத்தின் இறைவா! இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.
என் அன்பு தந்தையே இறைவா! உம்மை வாழ்த்துகிறோம். உம்மை போற்றுகிறோம். உம்மை புகழ்கிறோம். உமது பேரன்புக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் வார்த்தையாலும், வாழ்வாலும், இறப்பாலும், உயிர்ப்பாலும் திருச்சபையை ஏற்படுத்த நீர் திருவுளமானீர்.
பெந்தகோஸ்து பெருவிழாவின் போது அன்னை மரியா, திருதூதர்கள் மற்றும் திரளான மக்கள் மீது உமது தூய ஆவியைப் பொழிந்தீர். அதே தூய ஆவியின் ஆற்றலால், தொடக்க கால திருச்சையின் மக்கள், திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும், உடமைகளை பகிர்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கச் செய்தீர்.
உறவின் இறைவா! தொடக்கக் கால கிறிஸ்துவ சமுகத்தைப் போல சிறு சிறு அன்பியச் சமுகங்களாக நாங்கள் வாழ எங்களை அழைக்கின்றீர். எங்கள் அன்பியச் சமூகங்களின் வாழ்வும் பணியும், எங்கள் பங்குத் தளங்களில், நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றாக அமையச் செய்தருளும்.
இரக்கத்தின் இறைவா! இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.
எம் பங்கு, பல அன்பியங்களின் ஒருங்கிணைந்த கிறிஸ்துவச் சமூகமாகத் திகழச் செய்தருளும். இதனால் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை, பங்கேற்புத் திருச்சபையாக மலரவும், அன்புக் கலாச்சாரத்தின் அடிப்படையில் மனித நேயம் நிறைந்த, புத்துலகு படைக்கவும் அருள்தாரும்.
எஙகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
பெந்தகோஸ்து பெருவிழாவின் போது அன்னை மரியா, திருதூதர்கள் மற்றும் திரளான மக்கள் மீது உமது தூய ஆவியைப் பொழிந்தீர். அதே தூய ஆவியின் ஆற்றலால், தொடக்க கால திருச்சையின் மக்கள், திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும், நட்புடன் உறவாடுவதிலும், அப்பம் பிடுவதிலும், இறை வேண்டலிலும், உடமைகளை பகிர்ந்து வாழ்வதிலும் நிலைத்திருக்கச் செய்தீர்.
உறவின் இறைவா! தொடக்கக் கால கிறிஸ்துவ சமுகத்தைப் போல சிறு சிறு அன்பியச் சமுகங்களாக நாங்கள் வாழ எங்களை அழைக்கின்றீர். எங்கள் அன்பியச் சமூகங்களின் வாழ்வும் பணியும், எங்கள் பங்குத் தளங்களில், நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றாக அமையச் செய்தருளும்.
இரக்கத்தின் இறைவா! இன்றைய உலகை ஆட்டிப் படைக்கும் ஏற்றத் தாழ்வுகள், அடக்குமுறைகள், அநீத அமைப்புகள் மற்றும் அடிமைத்தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக, எமது அன்பியங்களில் அன்புப் பகிர்வும், தோழமை உறவும், சமத்துவப் பங்கேற்பும் விளங்கச் செய்தருளும்.
எம் பங்கு, பல அன்பியங்களின் ஒருங்கிணைந்த கிறிஸ்துவச் சமூகமாகத் திகழச் செய்தருளும். இதனால் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபை, பங்கேற்புத் திருச்சபையாக மலரவும், அன்புக் கலாச்சாரத்தின் அடிப்படையில் மனித நேயம் நிறைந்த, புத்துலகு படைக்கவும் அருள்தாரும்.
எஙகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X