என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இயேசுவின் சிலுவை- எழுச்சியின் முன் உதாரணம்
Byமாலை மலர்17 Oct 2020 7:32 AM GMT (Updated: 17 Oct 2020 7:32 AM GMT)
இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம்.
ஓர் இளைஞன் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி வீட்டுக்கு வந்தான். காவல்துறையினர் அவனை துரத்தினர். இதை கண்ட அண்ணன் தம்பியின் இரத்தக்கறை படிந்த ஆடையை கழற்றி, தான் அதை உடுத்திக்கொண்டான். அண்ணனின் உடையில் இரத்தக்கறையைப் பார்த்த காவல் அதிகாரி அண்ணனைக் கைது செய்து முடிவில் தூக்கு தண்டனைக்கு அழைத்து சென்றனர். தூக்கில் தொங்கும் முன் தூர நின்றுகொண்டிருந்த தன் தம்பியைப் பார்த்த அண்ணன் 'நீ இனிமேல் நீதிமான். பரிசுத்த வாழ்வை கற்றுக்கொள்" என்றான்.
தம்பியின் குற்றத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டது போல இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம். இயேசுவின் சிலுவைப் பயணம் கோழைத்தனத்தின் வெளிப்பாடல்ல, மாறாக வீரத்தின் அடையாளம். இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்தை உருவாக்குகின்றது என்று நினைக்காமல், தீமைக்கு எதிராகப் போராடத் தூண்டுவதாக அமைய வேண்டும். சிலுவை துன்பத்தின் அடையாளம் என்று மட்டும் பார்க்காமல், பகிர்வின், மன்னிப்பின், புதுவாழ்வின் அடையாளம் என்பதை உணரவேண்டும்.
"நீதிமான்களின் வாழ்வில் நீதிபிறக்கின்றது.
போராளியின் சாவில் போராட்டம் பிறக்கின்றது
இலட்சியவாதியின் சாவில் இலட்சியம்
வலுப்பெறுகிறது.
தம்பியின் குற்றத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டது போல இயேசு நமது குற்றங்களுக்காக, பாவங்களுக்காக தன்னையே இழந்தார். இயேசுவின் கல்வாரிப் பயணம், வீழ்ச்சியின் அடையாளம் அல்ல, வாழ்வு தரும் எழுச்சியின் முன் உதாரணம். இயேசுவின் சிலுவைப் பயணம் கோழைத்தனத்தின் வெளிப்பாடல்ல, மாறாக வீரத்தின் அடையாளம். இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்தை உருவாக்குகின்றது என்று நினைக்காமல், தீமைக்கு எதிராகப் போராடத் தூண்டுவதாக அமைய வேண்டும். சிலுவை துன்பத்தின் அடையாளம் என்று மட்டும் பார்க்காமல், பகிர்வின், மன்னிப்பின், புதுவாழ்வின் அடையாளம் என்பதை உணரவேண்டும்.
"நீதிமான்களின் வாழ்வில் நீதிபிறக்கின்றது.
போராளியின் சாவில் போராட்டம் பிறக்கின்றது
இலட்சியவாதியின் சாவில் இலட்சியம்
வலுப்பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X