search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாறையில் பீறிட்ட தண்ணீர்
    X
    பாறையில் பீறிட்ட தண்ணீர்

    பாறையில் பீறிட்ட தண்ணீர்

    கடவுள் அளித்த தண்டனை காரணமாக, இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
    கடவுள் அளித்த தண்டனை காரணமாக, இஸ்ரவேலர்கள் நாடின்றி 40 ஆண்டுகள் பாலைவனத்தின் பல்வேறு இடங்களில் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு 39 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இத்தனை ஆண்டுகளாகத் தம் மக்களுக்கு, பனியைப் போன்ற மன்னா உணவைப் பொழியச் செய்து அவர்களைப் பட்டினியிலிருந்து காத்திருந்தார் கடவுள்.

    தன்னுடன் பேசவும், வழிகாட்டுதல் பெறவும், ஆசாரிப்புக் கூடாரம் அமைத்து புனிதம் பேணவும் கடவுளே கற்றுக்கொடுத்திருந்தார். அந்தக் கூடாரத்தின் மீது பகலில் வெள்ளை மேகமாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் இறங்கிவந்து அவர்களுக்கு நம்பிக்கை அளித்தார். பாலைவனத்தின் கடும்வெப்பம், கடுங்குளிர், கல், முள் ஆகிய எதனாலும் அவர்கள் பாதிக்காத வண்ணம் காத்து வந்த கடவுள், இஸ்ரவேலர்களின் ஆடைகள் இத்தனை ஆண்டுகளில், பழுதாகிக் கிழிந்துவிடாத அற்புதத்தையும் செய் தார்.

    கடவுள் அளித்த தண்டனை முடியவிருக்கும் 40-வது ஆண்டின் தொடக்கத்தில் பாலைவனத்தில் காதேஸ் என்ற இடத்துக்கு மீண்டும் வந்து முகாமிட்டுத் தங்கினார்கள். சுமார் 39 ஆண்டுகளுக்கு முன், கானான் நாட்டைக் குறித்து உளவறிந்து வர பன்னிரண்டு வேவுக்காரர்களை அனுப்பி வைத்தபோது இஸ்ரவேலர்கள் தங்கியிருந்தது இதே காதேஸில்தான். இம்முறை காதேஸில் முகாமிட்டபோது மோசேயின் அக்காவான மிரியாம் இறந்து போனார். மிரியாமின் இறப்பு அவர்களை வாடச் செய்தது.

    இப்போது காதேஸில் அவர்களுக்குப் புதிய பிரச்சினை தோன்றியது. யாருக்கும் குடிக்கத் தண்ணீர் இல்லை. எனவே மக்கள் மோசேவிடம் கூட்ட மாகச் சென்று முறையிட்டார்கள்.

    “நாங்கள் எகிப்திலேயே செத்துப்போயிருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். தண்ணீர் இல்லாத இந்தப் பாலைக்கு ஏன் எங்களை நடத்திக்கொண்டு வந்தீர்? இங்கு தானியமோ, திராட்சையோ, மாதுளையோ, ஏன் அத்திப் பழங்களோ கூட இல்லை” என்று கண்ணீர் ததும்பக் கூறினார்கள்.

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடவுளின் கருணையை எதிர்பார்த்து ஆசரிப்புக் கூடாரத்துக்குச் சென்று மோசேவும், ஆரோனும் முழந்தாளிட்டனர். அப்போது இறங்கிவந்த கடவுள், “இந்த மக்களைக் கூட்டமாக அழைத்துச் சென்று இங்கேயிருக்கும் கற்பாறையின் முன் நிறுத்து. பின்னர் கற்பாறையைப் பார்த்துப் பேசு. அப்போது மக்களுக்கும், அவர்களுடைய எல்லா விலங்குகளுக்கும் போதுமான தண்ணீர் அதிலிருந்து பீறிட்டு வரும்” என்று மோசேயிடம் கூறினார்.

    இதைக் கேட்டு நிம்மதியுடன் வெளியே வந்தபோது மோசேயின் முகத்தை மக்கள் ஆவலுடன் நோக்கினார்கள்.

    மக்களைக் கற்பாறைக்கு அழைத்துச்சென்ற மோசே “நானும் ஆரோனும் இந்தக் கற்பாறையில் இருந்து உங்களுக்குத் தண்ணீர் வரவழைத்துக் காட்டட்டுமா?” என்று கேட்டார். பின் னர் மக்களின் பதிலுக்குக் காத்திருக்காமல் மோசே ஒரு கோலினால் அந்தக் கற்பாறையை இருமுறை அடித்தார்.

    இப்போது அந்தக் கற்பாறையிலிருந்து மலையருவி ஒன்றின் ஊற்றுக்கண்போல தண்ணீர் பீய்ச்சி அடித்து ஓடத்தொடங்கியது. கடவுளின் கருணை தண்ணீராய் ஊற்றெடுத்து வருவதைக் கண்ட மக்கள் அனைவரும் அள்ளிப்பருகி நிம்மதியடைந் தனர். தங்களின் விலங்குகளுக்கு வேண்டியமட்டும் தண்ணீர் காட்டினர்.
    Next Story
    ×