search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இதய ஆண்டவர்
    X
    இதய ஆண்டவர்

    இதய ஆண்டவர் வேண்டுதல்

    ஓ ஆண்டவரே ! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக்கொள்ளும் படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது நமஸ்தரிக்கிறோம்.
    ஆயிரக்கணக்கான மற்ற குடும்பங்களுக்குள் இக்குடும்பத்தைத் தமது உரிமையாக வும், மனுமக்களால் தமக்கு நேரிடும் சிநேகத்துக்கு நன்றிகெட்டதத்தனத்துக்குக் பரிகாரமான வாசஸ்தலமாகவும் தெரிந்தெடுத்துக்கொள்ள சித்தமான இயேசுவின் திரு இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக.

    ஓ ஆண்டவரே ! எங்கள் குடும்பத்துக்குத் தலைவராக உம்மை ஏற்றுக்கொள்ளும் படி ஏழையாகிய எங்களுக்குக் கிடைத்த பாக்கியம். எங்களால் கூடிய மட்டும் உம்மை வணக்கமாய் ஆராதித்தது நமஸ்தரிக்கிறோம். எங்களுக்கு நேரிடும் துன்ப துரிதங்கள், இன்ப சந்தோஷங்கள், மனக்கவலை சகலத்திலும் நீர் எங்களோடிருப் பதை பற்றி மனமகிழிகிறோம். நீசராகிய எங்கள் குடிசைக்குள் தேவரீர் எழுந்தருளி வர நாங்கள் பாத்திரவான்கள் அல்ல. ஆனால் உமது திருஇருதய சோபனத்ததை எங்களுக்கும் விளக்கிக் காட்டும் உன்னத மொழிகளில் திருவாய் மலர்ந்திருக்கிறீரா கையால், எங்கள் ஆத்துமம் உம்மை நாடித் தேடுகின்றது. ஈட்டியால் குத்தி திறக்பப் பட்ட உமது விலாவினின்று ஓடி வரும் சீவிய ஊற்றில் எங்கள் ஆவலைத் தீர்ப் போம்.

    முடிவில்லாத சீவியத்திற்கு ஊற்றும் மூலமுமாயிருக்கும் உமக்கே எங்களை முழு வதும் கையளிக்கிறோம். ஓ! இயேசுவின் திரு இருதயமே எங்களைவிட்டு ஒருபோ தும் பிரியாதேயும். உம்மையே நேசிக்கவும் மற்றவர்களும் உம்மை நேசிக்கும்டிபச் செய்யவும், இதுமுதற்கொண்டு உழைத்துவருவோம். உலகத்தைப் பரிசுத்தமாக்கும் படி அதைச் சுட்டெரிக்கும் தேவ அக்கினி நீரே. பெத்தானியாவில் உமக்கு இல்லி டம் கொடுத்த வீடுபோல் இந்த வீடும் உமக்குப் பிரியமுள்ளதாய் இருப்பதாக! உமது திருஇருதயத்தோடு சல்லாபித்துக் கொண்டிருக்கும் பாக்கியத்தைத் தந்த ருளும். பரிசுத்த ஆத்துமாக்கள் இந்த வீட்டிலும் காணக்கிடைப்பார்களாக. அத்தி யந்த நேசமுள்ள இரட்சகரே! எகிப்து தேசத்திற்கு நீர் சிறு குழந்தையாய்ப் போன போது உமக்குக் கிடைத்த தாழ்மையான இல்லிடம்போலவென்கிலும் இவ்வீடு இருக்கும்படிச் செய்தருளும்.

    ஓ! இயேசுவே எழுந்தருளி வாரும். நசரேத்தூரில் உமது தருத்தாயானவள் எவ்வித மாய் நேசிக்கப்பட்டாளோ, அவ்விதமே இங்கேயும் அவளை உருக்கமாய் நேசித்து வருகிறோம். மிகவும் பிரமாணிக்கமாயுள்ள அததம சிநேகிதரே, எங்கள் கஸ்தி துன்பவேளையில் நீர் இங்கே இருந்திருப்பீரானால், எங்களுக்கு ஆறுதலாயிருந்திரு க்கும். ஆகிலும் எங்கள் இக்கட்டுக்காலம் இன்னும் முடியவில்லையாதலால், இப் போதே எழுந்தருளிவாரும். எங்களோடே வாசஞ்செய்ய கிருபைகூர்ந்தருளும். ஏனெ னில் மாய உலகம் எங்களை மயக்கி, உம்மை மறந்துபோகும்படி ஏவித்தூண்டு கிறது. நாங்களோவெனில், உம்மோடு என்றென்றைக்கும், ஐக்கியமாயிருக்க ஆசையாய்இருக்கிறோம். எங்களுக்கு வழியும், உண்மையும், வாழ்வுமாயிருக்கிறீர். பூவுலகில் நீர் மனுமகனாய் சஞ்சரித்த காலத்தில் உரைத்ததுபோல், இன்று இந்த வீட்டில் நான் தங்கி வசிப்பேன் என்று உமது திருவாய் மலர்ந்து எங்களுக்கும் சொல்வீராக! ஆண்டவரே இதை உமது வாசஸ்தலம் ஆக்கியருளும். நாங்கள் உம்மையே எங்கள் அரசராக வாழ்த்தி ஸ்துதித்து எப்போதைக்கும் உம்மோடு உமக்குப் பிரியமுள்ளவர்களாக சீவிக்கும்படி உதவி செய்தருளும்.

    ஓ, இயேசுவே! ஜெயசீலரான் ஆண்டவரே! உமது இருதயம் என்றென்றைக்கும் இவ்வீட்டில் சங்கித்து ஸ்துதிக்கப்படுவதாக. உம்முடைய இராச்சியம் வருக. - ஆமென்.

    இயேசுவின் திரு இருதயமே, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!
    இயேசுவின் திரு இருதயமே, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!
    இயேசுவின் திரு இருதயமே, எங்கள்பேரில் இரக்கமாயிரும்!

    புனித மரியாயின் மாசற்ற இருதயமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
    புனித மார்கரீத்து மரியாவே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
    Next Story
    ×