search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செபமாலை
    X
    செபமாலை

    செபமாலை மறைபொருள்கள்

    ஒரு கிறித்து கற்பித்த செபம், 10 மங்கள வார்த்தை செபம், திரித்துவப் புகழ் சொல்லப்படும். இறுதியில் "ஓ என் இயேசுவே!..." செபம் செபிக்கப்படும்.
    மகிழ்ச்சி மறைபொருள்கள்

    கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்தது. (லூக்கா 1:30,38 - வரம்:தாழ்ச்சி)
    மரியாள் எலிசபெத்தைச் சந்தித்தது. (லூக் 1:41-42 - வரம்:பிறரன்பு)
    இயேசுவின் பிறப்பு. (லூக் 2:6-7 - வரம்: எளிமை)
    இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தது. (லூக் 2:22 - வரம்:பணிவு)
    காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்தது. (லூக் 2:49-50 - வரம்:அவரை எந்நாளும் தேடி நிற்க)

    ஒளியின் மறைபொருள்

    இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்றது. (மத்தேயு 3:16-17 - வரம்:குணப்படுத்தும் ஆவியானவர்)
    கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியது. (யோவான் 2:11 - வரம்:நம்பிக்கை)
    இயேசு இறையரசை பறைசாற்றி, மனந்திரும்ப அழைத்தது. (மாற்கு 1:14-15 - வரம்:மனம்மாற்றம்)
    இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்தது. (மாற்கு 9:3,7 - வரம்:புனிதம்)
    இயேசு இறுதி இரவுணவின்போது நற்கருணையை ஏற்படுத்தியது. (மத்தேயு 26:26-28 - வரம்:ஆராதணை)

    துயர மறைபொருள்கள்

    இயேசு இரத்த வியர்வை சிந்தியது. (மத்தேயு 26:42 - வரம்:பாவங்களுக்காக மனத்துயர் அடைய)
    இயேசு கற்றூணில் கட்டுண்டு அடிப்பட்டது. (மாற்கு 15:15 - வரம்:புலன்களை அடக்கி வாழ)
    இயேசு முள்முடி தரித்தது. (மத்தேயு 27:29-30 - வரம்: ஒறுத்தல், நிந்தை தோல்விகளை மகிழ்வுடன் ஏற்க)
    இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவான் 19:16-17 - வரம்: வாழ்க்கைச் சுமையை பொறுமையோடு ஏற்று வாழ)
    இயேசு சிலுவையில் அறையப்பட்டது. (யோவான் 19:30 - வரம்:இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும்)

    மகிமை மறைபொருள்கள்

    இயேசு உயிர்த்தெழுந்தது. (மத்தேயு 28:5-6 - வரம்:உயிருள்ள விசுவாசத்துடன் வாழ)
    இயேசுவின் விண்ணேற்றம். (லூக்கா 24:50-51 - வரம்:நம்பிக்கையுடன் விண்ணக வாழ்வைத் தேட)
    தூய ஆவியாரின் வருகை. (திருப்பாடல் 2:4 - வரம்: ஆவியாரின் ஒளியையும் அன்பையும் பெற)
    இறையன்னையின் விண்ணேற்பு. (திருவெளிப்பாடு 12:1 - வரம்:நாமும் விண்ணக மகிமையில் பங்குபெற)
    இறையன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப் பெற்றது. (லூக்கா 1:49,52 - வரம்:அன்னையின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ள)
    Next Story
    ×