search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    விசுவாசத்தினால் விடுதலை தரும் தேவன்

    இன்றைக்கும் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள தகுதியோ,அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும்.
    கிறிஸ்துவின் பாடுகள் பற்றி நாம் தியானித்து வரும் இந்த நாட்களில் கிறிஸ்துவின் போதனையான தேவன் மேல் வைக்கும் விசுவாசத்தைக் குறித்து நாம் தியானிப்போம். இன்றைய நாட்களை போலவே தேவைகள்,வியாதிகள்,பிரச்சனைகளிலிருந்து விடுதலை என்று பலவிதமான காரியங்களுக்கு பதில் தேடி அநேக இடங்களுக்கு அலைகிற ஜனங்கள் இயேசுவின் நாட்களிலும் இருந்தார்கள்.ஆனால் அவர்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த நல்லதொரு போதனைதான் விசுவாசம். அவர் தம்முடைய வாழ்நாள் முழுவதும் விசுவாசத்தின் மேன்மைகளை தமது சீடர்களுக்கு போதித்தார்.

    தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோ:3:16)என்று வேதம் கூறுகிறது. இன்றைய உலகில் நாம் தேடும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் இயேசுவின் மேல் வைக்கும் விசுவாசம் நமக்கு நல்ல பதிலைப் பெற்றுத்தரும். தம்முடைய குமாரனை விசுவாசிக்கும் அனைவருக்கும் உலக நன்மைகளை மட்டும் வாக்குப்பண்ணாமல் நித்திய ஜீவனையும் தேவன் கொடுத்திருக்கிறார். அவரை விசுவாசித்து ஏற்றுக்கொள்கிற அனைவருக்காகவும் அவர் சிலுவையில் ரத்தம் சிந்தியிருக்கிறார்.

    இன்றைக்கும் தேவனிடத்தில் அற்புதங்களையும், அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள தகுதியோ,அந்தஸ்தோ தேவை இல்லை. நாம் விசுவாசத்தோடு வேண்டிக்கொண்டாலே போதும். கிறிஸ்துவைப்போல தேவன்மேல் வைத்த விசுவாசத்தை வெளிப்படுத்த எவருமில்லை. மற்றவர்களை ரட்சித்தான் தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத்தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் (மத்:27:42,43) என்று சுற்றி இருந்த ஜனங்கள் ஏளனமாய் பேசின போதிலும், நம்பிக்கையற்ற வார்த்தைகளைக் கூறின போதும் தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லமையுள்ள தேவன் மேல் விசுவாசமுள்ளவராகவே இருந்தார்.

    தம்மை மரணத்திலிருந்து எழுப்ப வல்லவரிடத்தில் தம் ஜீவனை ஒப்புக்கொடுத்தார். ‘பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார். இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார் (எபி:2:15) என்று வேதம் கூறுகிறது. நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் என்று சொன்னவரை பிதாவாகிய தேவன் சொன்னபடி 3-ம் நாளிலே எழுப்பினார் கிறிஸ்துவின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் நாம் எதைக்கேட்டாலும் அதை செய்ய அவர் வல்லமையுள்ளவர். அவரை விசுவாசிப்போம்,தேவனுடைய அற்புதத்தைப் பெற்றுக்கொள்வோம்.

    சகோதரி. மேரி அமல்ராஜ்,

    மண்ணரை பாரப்பாளையம், திருப்பூர்
    Next Story
    ×