search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    புதிய பாதையை கண்டுபிடி

    ஒவ்வொரு தனிமனிதனும் மேலும், மேலும் கஷ்டப்பட்டு தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் துணிந்து பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
    உடலாலும், மனதாலும், அறிவாலும் தன்னால் முடிந்த அளவு சாதிப்பதே ஒரு மனிதனின் முக்கியமான குறிக்கோளாக இருக்க வேண்டும். மற்றவர்கள் செல்லும் அதே பாதையில் பயணிக்க ஆசைப்படுவதை விட சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் துணிந்து புதிய பாதையினை கண்டுபிடியுங்கள். தொடந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். வெற்றி உங்களை தேடிவரும். ஒவ்வொரு தனிமனிதனும் மேலும், மேலும் கஷ்டப்பட்டு தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் துணிந்து பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இளையோர்கள் தங்களது படைப்பு திறனை பயன்படுத்தி தனது தனித்தன்மையை நிறைவேற்ற போராடும் ஒரு இயக்கமாக மாறி செயல்பட வேண்டும்.

    கற்பனையும், விடாமுயற்சியும் கொண்டவர்கள் உலகத்தின் எல்லா பொருட்களாலும், செயல்களாலும் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். இத்தகைய மனப்பக்குவம் உறுதிபெற மிகுந்த துணிச்சலுடன் கடினமாக உழைத்து பெற்றியை எட்டுவேன் என நாம் உறுதியெடுக்க வேண்டும். நல்ல புத்தகங்க, ஆசிரியர்கள், நண்பர்கள், வழிகாட்டிகள், இணையதளத்தின் மூலம் புதிய செய்திகளை கற்று கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நமது அறிவையும் தொடர்ந்து நம்மால் விசாலப்படுத்தி செயல்பட முடியும். பூமி தன்மைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. அது தனது அச்சில் தன்னைத்தான் சுற்றி கொள்ள ஒருநாள் அதாவது 24 மணி நேரம் அல்லது 1440 நிமிடங்கள் தேவைப்படுகிறது. நாமும் இத்தகைய வேத்துடன் செயல்பட்டு கொண்டே இருக்க வேண்டும். மகாத்மா காந்தியின் தாயார் அவரிடம் மகனே உன் வாழ்நாள் முழுவதும் நீ மற்றவர்களுக்காக செலவிட வேண்டும். மற்றவர்கள் நன்மை செய்து அவர்கள் மேலும் முன்னேற வழிசெய்ய வேண்டும். இதனாலேயே நீ பிறந்த நற்பயனை அடைய முடியும். உனக்கு இறைவனின் ஆசி என்றென்றும் உண்டு என்றார். நாமும் இதை போன்று நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் எல்லா நல்லதைவும் பெற்றிட உழைக்க வேண்டும். வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களோடு உடனிருந்து அவர்களுக்கு தேவையான எல்லா நல்லதையும் உருவாக்கிக் கொடுத்திட வேண்டும். நாம் கண்டுபிடிக்கின்ற புதிய பாதை இறையாட்சி பாதையாக அமையட்டும்.

    அருட்பணியாளர் குருசு கார்மல்,
    கோட்டார் மறை மாவட்டம். 
    Next Story
    ×