search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நிம்மதி தரும் சிலுவை
    X
    நிம்மதி தரும் சிலுவை

    நிம்மதி தரும் சிலுவை

    மன நிம்மதியை நீங்கள் பெற வேண்டுமானால் இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் நமக்காக பட்ட பாடுகளை நாம் சிந்திக்க வேண்டும்.
    இன்று சிலுவையின் மூலம் நிம்மதி நம் வாழ்வில் எப்படி வரும் என்று தியானிக்க போகிறோம். ஏனென்றால் உலகில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் தேடுவது நிம்மதியை தான். ஆடம்பரமாக வாழாவிட்டாலும் வீட்டில் நிம்மதியோடு வாழ்ந்தாலே போதும் என்கிற மனநிலையில் தான் பலர் உள்ளனர். ஆகவே தான் இயேசுவும் மத் 11:28-ல் “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்று கூறினார். நீங்கள் தேடும் நிம்மதி இயேசுவிடம் மட்டுமே உண்டு.

    மன நிம்மதியை நீங்கள் பெற வேண்டுமானால் இயேசு நமக்காக கல்வாரி சிலுவையில் நமக்காக பட்ட பாடுகளை நாம் சிந்திக்க வேண்டும். சங்கீதம் 55:22-ன்படி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேல் உங்கள் பாரங்களை வைத்து விடுங்கள். ஒருவேளை அது உங்கள் தனிப்பட்ட பிரச்சினையாக இருக்கலாம். குடும்ப பாரமாக இருக்கலாம். தொழில்(அல்லது) வேலை சம்பந்தப்பட்ட பாரமாக இருக்கலாம். குழந்தைகளின் கல்வி(அல்லது) எதிர்காலத்தின் பாரமாக இருக்கலாம். கடன் பாரமாக கூட இருக்கலாம்.

    வியாதியோ(அல்லது) அசுத்த ஆவிகளின் போராட்டமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த பாரங்களை இயேசுவின் மேல் இன்று வைப்பீர்களா? இயேசுவே உம்மிடத்தில் என் பாரங்களை இறக்கி வைக்கிறேன்!. இனி நீர் பார்த்து கொள்ளும்! எனக்கு உதவி செய்யும். என்னை உன் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும் என்று பிரார்த்தனை செய்தாலே போதும். உங்கள் பாவங்களை அவர் தம் மேல் ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்வை புதிதாக மாற்றுவார். உங்கள் கண்ணீர் துடைக்கப்படும். உங்களை கைவிட மாட்டார். உங்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கட்டும். ஆமென்.

    பிரியா பரமானந்தம்,

    சிட்டி ஏ.ஜி.சபை, திருப்பூர்.
    Next Story
    ×