என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வெற்றிக்கான வழி
Byமாலை மலர்20 April 2020 4:09 AM GMT (Updated: 20 April 2020 4:09 AM GMT)
சோர்ந்து போகிறவர்களுக்கு தேவன் பெலன் கொடுக்கிறார். தேவனே தோல்விகளின் நேரத்தில் பெலன் தந்து வெற்றிக்கான வழியை ஆயத்தப்படுத்துவார். ஆமென்.
பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக பலரின் வாழ்க்கை சோர்வடைந்ததாகவே காணப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.
கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல எந்த தோல்விக்கு பிறகும் வெற்றி நம்மை வந்து சேரும். எந்த பிரச்சினையும் இந்த உலகில் நிரந்தரமல்ல. எந்த குறைவுகளுக்கு பின்பும் நிறைவு வரும். நம்மை இதுவரை பாதுகாத்து வந்த தேவன் இனிமேலும் பாதுகாத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை நம்மில் வளர்த்து கொள்ள வேண்டும்.
இதேபோல் தொழிலில் சரிவையே சந்தித்த ஒரு தொழில் அதிபர் மனம் நொந்து போய் கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் கடற்கரையில் இருந்த மணலில் அழகாக வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடலில் இருந்து வந்த அலை அந்த குழந்தைகள் கட்டிய வீட்டை அழித்து விட்டது. இதைப்பார்த்த அந்த தொழில் அதிபர், அந்த குழந்தைகள் மீண்டும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைகள் சிரித்துக்கொண்டே வேறு ஒரு இடத்திற்கு சென்று மீண்டும் மணல் வீட்டை கட்ட ஆரம்பித்தனர். இதைப்பார்த்த தொழில் அதிபருக்கு ஒரே அதிர்ச்சி. இப்படி இந்த குழந்தைகள் சோர்ந்து போகாமல் திரும்ப, திரும்ப மணல் வீட்டை கட்டி விளையாடுகின்றனர். நாமும் தொழிலில் எவ்வளவு சரிவு வந்தாலும் மனதில் சோர்வு அடையாமல் திரும்ப, திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி சந்தோஷமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத்தான் வேதாகமத்தில் நீதிமொழிகள் 24-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் ‘ஆபத்து காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது’ என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளதா? நம்முடைய வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? சோர்ந்து போகாதீர்கள். இப்படி சோர்ந்து போனால் நம் வாழ்க்கை குறுகியதாய் மாறி விடும். சோர்ந்து போகிறவர்களுக்கு தேவன் பெலன் கொடுக்கிறார். தேவனே தோல்விகளின் நேரத்தில் பெலன் தந்து வெற்றிக்கான வழியை ஆயத்தப்படுத்துவார். ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
கோடைக்கு பின் வசந்தகாலம் வருவது போல எந்த தோல்விக்கு பிறகும் வெற்றி நம்மை வந்து சேரும். எந்த பிரச்சினையும் இந்த உலகில் நிரந்தரமல்ல. எந்த குறைவுகளுக்கு பின்பும் நிறைவு வரும். நம்மை இதுவரை பாதுகாத்து வந்த தேவன் இனிமேலும் பாதுகாத்துக் கொள்வார் என்ற நம்பிக்கையை நம்மில் வளர்த்து கொள்ள வேண்டும்.
இதேபோல் தொழிலில் சரிவையே சந்தித்த ஒரு தொழில் அதிபர் மனம் நொந்து போய் கடற்கரைக்கு சென்றார். அப்போது அங்கு 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அந்த குழந்தைகள் சிறிது நேரத்தில் கடற்கரையில் இருந்த மணலில் அழகாக வீடு கட்டி விளையாடி கொண்டிருந்தனர். திடீரென கடலில் இருந்து வந்த அலை அந்த குழந்தைகள் கட்டிய வீட்டை அழித்து விட்டது. இதைப்பார்த்த அந்த தொழில் அதிபர், அந்த குழந்தைகள் மீண்டும் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைகள் சிரித்துக்கொண்டே வேறு ஒரு இடத்திற்கு சென்று மீண்டும் மணல் வீட்டை கட்ட ஆரம்பித்தனர். இதைப்பார்த்த தொழில் அதிபருக்கு ஒரே அதிர்ச்சி. இப்படி இந்த குழந்தைகள் சோர்ந்து போகாமல் திரும்ப, திரும்ப மணல் வீட்டை கட்டி விளையாடுகின்றனர். நாமும் தொழிலில் எவ்வளவு சரிவு வந்தாலும் மனதில் சோர்வு அடையாமல் திரும்ப, திரும்ப முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணி சந்தோஷமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதைத்தான் வேதாகமத்தில் நீதிமொழிகள் 24-ம் அதிகாரம் 10-ம் வசனத்தில் ‘ஆபத்து காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது’ என்று எழுதப்பட்டுள்ளது.
எனவே தொழிலில் சரிவு ஏற்பட்டுள்ளதா? நம்முடைய வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? சோர்ந்து போகாதீர்கள். இப்படி சோர்ந்து போனால் நம் வாழ்க்கை குறுகியதாய் மாறி விடும். சோர்ந்து போகிறவர்களுக்கு தேவன் பெலன் கொடுக்கிறார். தேவனே தோல்விகளின் நேரத்தில் பெலன் தந்து வெற்றிக்கான வழியை ஆயத்தப்படுத்துவார். ஆமென்.
சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X