என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலயங்களில் பக்தர்கள் இன்றி புனித வெள்ளி சிறப்பு ஆராதனை
    X
    ஆலயங்களில் பக்தர்கள் இன்றி புனித வெள்ளி சிறப்பு ஆராதனை

    ஆலயங்களில் பக்தர்கள் இன்றி புனித வெள்ளி சிறப்பு ஆராதனை

    கொரோனா ஊரடங்கையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனையை அந்தந்த ஆலய பங்குத்தந்தைகள் மற்றும் இணை பங்குத்தந்தைகள் மட்டும் நிறைவேற்றினர்.
    உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகையும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான நேற்று புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி ஆராதனையை அந்தந்த ஆலய பங்குத்தந்தைகள் மற்றும் இணை பங்குத்தந்தைகள் மட்டும் நிறைவேற்றினர். சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கிறிஸ்தவர்கள் யாரும் ஆலயங்களுக்கும் செல்லவில்லை.

    கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை ஆயர் இல்லத்தில் உள்ள ஆலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நிறைவேற்றினார். இது நேரலையாக மறைமாவட்ட தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்ட புனித வெள்ளி நிகழ்ச்சியை பார்த்து வீட்டில் இருந்தபடியே பிரார்த்தனை செய்தனர். கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா நிறைவேற்றிய புனித வெள்ளி ஆராதனை ஏற்கனவே வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு நேற்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஆன்லைன் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது இயேசு சிலுவையில் அறையப்பட்ட நிலையில் கூறிய 7 வார்த்தைகளையும் தியான உரைகளாக ஆராதனையின் போது தியானிக்கப்பட்டன.
    Next Story
    ×