என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்17 Feb 2020 4:42 AM GMT (Updated: 17 Feb 2020 4:42 AM GMT)
மார்த்தாண்டம், வெட்டுமணி தூய அந்தோணியார் திருத்தல திருவிழா நாளை (18-ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.
மார்த்தாண்டம் வெட்டுமணியில் கோடி அற்புதர் என போற்றப்படும் தூய அந்தோணியார் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 10.15 மணிக்கு அருட்பணியாளர் சுஜின்குமார் தலைமையில் திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் ஜெரால்டு ஜெஸ்டின் மறையுரை நிகழ்த்துகிறார். மாலை 6 மணிக்கு திருவிழா கொடியேற்றமும், திருப்பலியும் குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் யேசு ரெத்தினம் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் மறையுரை வழங்குகிறார். பங்குத்தந்தை அந்தோணி முத்து, இணைப்பங்குத்தந்தை மரிய மார்ட்டின், ஆன்மீக வழிகாட்டி டென்சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
19-ந் தேதி மாலை அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும், 20-ந் தேதி அலோசியஸ் தலைமையிலும், 21-ந் தேதி காலை 10.15 மணிக்கு எக்கர்மென்ஸ் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.
21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மனோகியம் சேவியர் மறையுரை வழங்குகிறார். 23-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜாண் குழந்தை தலைமையில் நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், அருட்பணியாளர் மரியதாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாலையில் பெனடிக்ட் அனலின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தூய அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.
24-ந் தேதி மாலையில் டோமினிக் சாவியோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 9.30 மணி முதல் சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில திருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மத நல்லிணக்க விழா நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி முத்து தலைமையில் பங்கு இறை மக்கள், பங்கு பேரவை, சிறப்பு நிதிக்குழு இணைந்து செய்துள்ளனர்.
19-ந் தேதி மாலை அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும், 20-ந் தேதி அலோசியஸ் தலைமையிலும், 21-ந் தேதி காலை 10.15 மணிக்கு எக்கர்மென்ஸ் தலைமையிலும் திருப்பலி நடக்கிறது.
21-ந் தேதி மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மனோகியம் சேவியர் மறையுரை வழங்குகிறார். 23-ந் தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜாண் குழந்தை தலைமையில் நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், அருட்பணியாளர் மரியதாசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாலையில் பெனடிக்ட் அனலின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு தூய அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.
24-ந் தேதி மாலையில் டோமினிக் சாவியோ தலைமையில் திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாள திருப்பலியும், 9.30 மணி முதல் சமபந்தி விருந்தும், மாலை 6 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில திருவிழா நிறைவு திருப்பலியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு மத நல்லிணக்க விழா நடைபெறும்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி முத்து தலைமையில் பங்கு இறை மக்கள், பங்கு பேரவை, சிறப்பு நிதிக்குழு இணைந்து செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X