search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X
    புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    புதூர் லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை புதூர் தூய லூர்து அன்னை ஆலய நூற்றாண்டு விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றினார். இதனை தொடர்ந்து ஜெபமாலை, ஆடம்பர திருப்பலி நடந்தது. இதில் பங்குதந்தை தாஸ் கென்னடி, உதவி பங்குதந்தை பிரபின் சூசடிமை, திருச்சி சலேசிய மாநில முன்னாள் தலைவர் கமில்லஸ், புனித லூர்து அன்னை ஆலய பொருளாளர் மரியதாஸ், ஜான்பால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நூற்றாண்டு விழாவையொட்டி தினமும் காலையிலும், மாலையிலும் நவநாள் சிறப்பு திருப்பலி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நற்கருணை பவனி நடக்கிறது. இதுபோல் சிகர நிகழ்ச்சியாக, வருகிற 15-ந்தேதி இரவு 7.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் யுவான்அம்புரோஸ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தைகள், உதவி பங்கு தந்தைகள், சலேசியர்கள், அருட்பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×