என் மலர்
ஆன்மிகம்

திருவிழா கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
குமரி மாவட்டம் பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் திருத்தலமாக உயர்த்தப்படும் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குமரி மாவட்டம் பெரியகாடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் திருத்தலமாக உயர்த்தப்படும் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதற்கு ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
9-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் செல்வராஜ் தலைமையில் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.
12-ந் தேதி இரவு கலைத்திறன் போட்டியும், 15-ந் தேதி திருவிழிப்பு நற்செய்தி கொண்டாட்டமும் நடக்கிறது.
16-ந் தேதி காலை முதல் தொடர்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. இதில் பென்சிகர் தலைமையில் ஜெகன் மறையுரையாற்றுகிறார்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்கு அருட்பணிப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
9-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் செல்வராஜ் தலைமையில் ஜோன்ஸ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.
12-ந் தேதி இரவு கலைத்திறன் போட்டியும், 15-ந் தேதி திருவிழிப்பு நற்செய்தி கொண்டாட்டமும் நடக்கிறது.
16-ந் தேதி காலை முதல் தொடர்ந்து திருப்பலி மற்றும் மறையுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. இதில் பென்சிகர் தலைமையில் ஜெகன் மறையுரையாற்றுகிறார்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்கு அருட்பணிப் பேரவையினர், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Next Story






