search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி நடந்தபோது எடுத்தபடம்.

    பெங்களூரு ஜாலஹள்ளியில் புனித பாத்திமா அன்னை தேர்பவனி

    பெங்களூரு ஜாலஹள்ளியில் உள்ள புனித பாத்திமா அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    பெங்களூரு ஜாலஹள்ளி புனித பாத்திமா அன்னை ஆலய 61-வது ஆண்டு விழா கடந்த 4-ந் தேதி பெங்களூரு மார்ட்டின் குமார் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் தமிழ், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடந்தன. இந்த பெருவிழா கடந்த 13-ந் தேதி நிறைவடைந்தது. ஆலய பெருவிழா நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.30 மணிக்கு தமிழில் ஜான் அந்தோணியும், 8 மணிக்கு கன்னடத்தில் ஜோசப் மெனேசெசும், 9.30 மணிக்கு மும்மொழியில் ஜெயநாதனும் திருப்பலி நடத்தினர்.

    காலை 11 மணிக்கு திருப்பய திருநாள் திருப்பலியை ஜான் ஆபிரகாமும், மாலை 3 மணிக்கு கொங்கனியில் மைக்கேல் மெனேசெசும், மாலை 4 மணிக்கு மலையாளத்தில் சூவன்ஸ்டாட் பாதர்சும், மாலை 5 மணிக்கு ஆங்கிலத்தில் விவியன் ரிச்சர்டும் திருப்பலி நடத்தினார்கள்.

    முன்னதாக 1,003 மணித்தொடர் ஜெபமாலை ஜெபிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குறைகள் தீர்க்கும் பொருட்டு ஜெபமாலை பூங்கா தரிசனம், மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான பாத்திமா அன்னையின் தேர்பவனி நடந்தது. இதில் வண்ண, வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாத்திமா அன்னை வீற்றிருந்து பவனி வந்தார்.

    தேர்பவனியை புறாவை பறக்கவிட்டு ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் தொடங்கி வைத்தார். இதில் பாத்திமா அன்னையின் ஆசிவேண்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக ஆலய பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அனைவருக்கும் திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜாலஹள்ளி பாத்திமா அன்னை பங்கு நிர்வாகத்தினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×