search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித பாத்திமா அன்னை
    X
    புனித பாத்திமா அன்னை

    புனித பாத்திமா அன்னை ஆலய தேர்பவனி

    திருச்சி புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 62-ம் ஆண்டு பெருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    திருச்சி புத்தூர் புனித பாத்திமா அன்னை ஆலயத்தின் 62-ம் ஆண்டு பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி தினமும் மாலை 6.30 மணிக்கு மறையுரை மற்றும் திருப்பலி நடந்தது. இந்த நிலையில் முக்கிய விழாவான தேர்பவனி நேற்று முன்தினம் மாலை நடந்தது. முன்னதாக கருமண்டபம் அருட்தந்தை தாமஸ் ஜான் ஜூலியன் தலைமையில் மறையுரை நடந்தது. அருட்தந்தை மைக்கில்ராஜ் மறையுரை நடத்தினார்.

    இதில் பங்கு பேரவையினர், பாடற்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவில் தேர்பவனி நடந்தது. இதில் புத்தூர் ஆலய பங்குத்தந்தை ஜான்கென்னடி உள்ளிட்ட கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேர்பவனி ஆலயத்தில் தொடங்கி திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மாருதி மருத்துவமனை, பட்டாபிராமன் பிள்ளை தெரு, காவேரி மருத்துவமனை, பாத்திமா உயர்நிலைப்பள்ளி, புத்தூர் நால்ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை நற்கருணை பெருவிழா திருப்பலி மற்றும் பவனி நடைபெற்றது.
    Next Story
    ×