என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பாத்திமா அன்னை சொரூப பவனி
Byமாலை மலர்29 July 2019 4:10 AM GMT (Updated: 29 July 2019 4:10 AM GMT)
போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பாத்திமா அன்னையின் சொரூப பவனி குளச்சல் பகுதியில் நடந்தது. தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
குளச்சல் அருகே கண்டர்விளாகத்தில் தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போர்ச்சுக்கல் நாடு பாத்திமா நகரிலிருந்து உலகம் முழுவதும் உலா சென்ற தூய பாத்திமா அன்னையின் சொரூபம் வந்து சென்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கண்டர்விளாகம் ஆலயத்திற்கு நிரந்தரமாக சுமார் 3½ அடி உயரமுள்ள தூய பாத்திமா அன்னையின் சொரூபம் வழங்கப்பட்டது.
இந்த சொரூபம் நேற்று மாலை குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் இருந்து கண்டர்விளாகத்திற்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சியில், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் திருப்பலி நிறைவேற்றினார்.
பவனியானது சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ஆலஞ்சி வழியாக கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலயம் சென்றடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், அருட்பணியாளர்கள் மரிய செல்வன், ஜான் குழந்தை மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து கண்டர்விளாகம் ஆலயத்திற்கு நிரந்தரமாக சுமார் 3½ அடி உயரமுள்ள தூய பாத்திமா அன்னையின் சொரூபம் வழங்கப்பட்டது.
இந்த சொரூபம் நேற்று மாலை குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் இருந்து கண்டர்விளாகத்திற்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சியில், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.சேல்ஸ் திருப்பலி நிறைவேற்றினார்.
பவனியானது சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை, ஆலஞ்சி வழியாக கண்டர்விளாகம் தூய பாத்திமா அன்னை ஆலயம் சென்றடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில், அருட்பணியாளர்கள் மரிய செல்வன், ஜான் குழந்தை மற்றும் அருட்சகோதரிகள், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X