என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அல்போன்சா ஆலயத்துக்கு திருப்பயணமாக வந்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    புனித அல்போன்சா ஆலயத்துக்கு திருப்பயணமாக வந்தவர்களை படத்தில் காணலாம்.

    புனித அல்போன்சா ஆலய திருப்பயண நேர்ச்சை

    நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா திருப்பயண நேர்ச்சை தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா ஆலய திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் 2-ம் நாள் விழாவையொட்டி திருப்பயண நேர்ச்சை நடந்தது.

    இந்த பயணத்துக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பறம்பில், மறை மாவட்ட இளைஞர் இயக்க தலைவர் ஜோசப் சந்தோஷ், சூசைபுரம் வட்டார முதன்மை பணியாளர் ஆன்றனி ஜோஸ், தக்கலை மறை மாவட்ட அருட்தந்தையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சிரோ மலபார் கத்தோலிக்க சபையில் தக்கலை மறை மாவட்ட ஆலயங்கள் அமைந்துள்ள நித்திரவிளை, படந்தாலுமூடு, முஞ்சிறை, கிள்ளியூர், கருங்கல், சூசைபுரம், பாலப்பள்ளம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட பங்கு மக்கள், 20-க்கும் மேற்பட்ட பங்குதந்தைகள், 50-க்கும் மேற்பட்ட அருட் சகோதரிகள் திருப்பயணமாக ஆலயத்துக்கு வந்து நேர்ச்சையை நிறைவேற்றினர்.

    நடை பயணமாக வந்தவர்களை ஆலய அதிபர் சனில் ஜாண் பந்திச்சிறக்கல், துணை பங்குதந்தை அஜின் ஜோஸ் மற்றும் பங்கு மக்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் ஆலயத்தில் திருப்பயணமாக வந்தவர்களுக்கு புனித அல்போன்சா சிறப்பு நவநாள் மற்றும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×