search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அல்போன்சா
    X
    புனித அல்போன்சா

    நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் புனித அல்போன்சா ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் சாலையில் உள்ள புனித அல்போன்சா ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாலை 6.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பரம்பில் கொடியேற்றி வைக்கிறார்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழாவன்று மாலை 6.30 மணிக்கு செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி நீதிநாதன் கலந்து கொண்டு மரியன்னையிடம் பக்தி கொண்டவள் புனித அல்போன்சா என்ற சிந்தனையுடன் மறையுரையாற்றுகிறார். நாகர்கோவில் புனித அல்போன்சா துணை பங்குதந்தை அஜின்ஜோஸ், சிறப்பு நவநாள் வழிபாட்டை நடத்துகிறார்.

    10-ம் நாள் விழாவன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து சாதி, மத வேறுபாடுகளை கடந்து திருப்பயணமாக வருகிறார்கள். காலை 9 மணிக்கு சிறப்பு நவநாள் வழிபாட்டை தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவ்வத்து பரம்பில் வழிநடத்துகிறார். தொடர்ந்து தக்கலை மறை மாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருவிழா தேர் பவனியும், நேர்ச்சை விருந்தும் நடைபெறும்.

    மாலை 3.30 மணிக்கு செங்கோட்டை, வாஞ்சிநகர் புனித லொரேட்டோ மாதா ஆலய பங்குதந்தை லிஜோ தெக்கேல் தலைமையில் நவநாள் வழிபாடும், 4 மணிக்கு அருட்தந்தை தோமஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, விருதுநகர் சீறோ மலபார் அருட்தந்தை பீட்டர் கிழக்கேல் மறையுரையாற்றுகிறார்.

    ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் அகஸ்டின் தறப்பேல், ஜேம்ஸ் கல்லூக்காரன், அருள்செல்வம், ஜார்ஜ் மற்றும் திருவழிபாட்டு ஏற்பாடுகளை பேரருட் தந்தை சனில் ஜாண் பந்திச்சிக்கல், துணை பங்குதந்தை அஜின் ஜோஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×