search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.
    X
    புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

    கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி

    கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆடம்பர தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. 15-ந் தேதி காலையில் புதுநன்மை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மறை மாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×