search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மார்சிங்பேட்டை அந்தோணியார் ஆலய தேர் பவனி
    X

    மார்சிங்பேட்டை அந்தோணியார் ஆலய தேர் பவனி

    திருச்சி மார்சிங்பேட்டை அர்ச். அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    திருச்சி மார்சிங்பேட்டை அர்ச். அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தில் தொடர்ந்து தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மார்சிங்பேட்டை, கண்டோன்மென்ட், கோர்ட்டு, பீமநகர் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் உள் வீதி தேர்பவனி நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. முன்னதாக தேர்பவனிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×