search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றம்
    X

    வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றம்

    நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில், வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 28-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது. வருகிற 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து சமபந்தி விருந்து நடக்கிறது.

    4-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர் பவனி போன்றவை நடைபெறும். நற்கருணை ஆசீர் நிகழ்ச்சியில் மறைமாவட்ட செயலாளர் அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்குகிறார்.

    விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு அருட்பணியாளர் ஜெரேமியாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி, மாலை 4 மணிக்கு தேர் பவனி, 5 மணிக்கு நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×