என் மலர்
ஆன்மிகம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா இன்று தொடங்குகிறது
இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை இடையே கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாள் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 2 நாள் நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாள் மாலை 5 மணிக்கு நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில் அந்தோணியாரின் திரு உருவம் பதித்த கொடி இருநாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றப்படுகிறது.
கச்சத்தீவு திருவிழாவையெட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 6 கப்பல்களும், சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் இரவு-பகலாக தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கச்சத்தீவு பகுதி முழுவதும் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கச்சத்தீவு திருவிழாவையெட்டி ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 6 கப்பல்களும், சென்னையில் உள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான பெரிய கப்பல் ஒன்றும் இரவு-பகலாக தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கச்சத்தீவு பகுதி முழுவதும் இலங்கை கடற்படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Next Story






