என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கயத்தாறு அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா தேரோட்டம்
Byமாலை மலர்28 Jan 2019 2:59 AM GMT (Updated: 28 Jan 2019 2:59 AM GMT)
கயத்தாறு அருகே புனித செபஸ்தியார் ஆலய திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளாக கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வெள்ளாளன் கோட்டை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடந்த இந்த விழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலி, நற்கருணை, சிறப்பு ஆராதனை நடந்து வந்தது.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் ஆலய பங்குதந்தை வில்சன் தலைமை தாங்கி, ஆலய தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பின்னர் இரவு 10.30 மணிக்கு தேர் ஆலயம் வந்தடைந்தது.
10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அப்போது பக்தர்கள் செபஸ்தியார் சொரூபத்துக்கு மாலை அணிவித்தனர். சிலர் நேர்ச்சையாக உப்பு, மிளகு கொடுத்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நடந் தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் ஆலய பங்குதந்தை வில்சன் தலைமை தாங்கி, ஆலய தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. பின்னர் இரவு 10.30 மணிக்கு தேர் ஆலயம் வந்தடைந்தது.
10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. அப்போது பக்தர்கள் செபஸ்தியார் சொரூபத்துக்கு மாலை அணிவித்தனர். சிலர் நேர்ச்சையாக உப்பு, மிளகு கொடுத்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நடந் தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X